பிரபல தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக்கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வந்த அவர் தனது முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் அர்ச்சனா
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்தார் அர்ச்சனா. அர்ச்சனா உள்ளே வந்த நாளில் இருந்தே அவரின் பேச்சு மட்டும் தான் கேட்டது. வேல்முருகனை கூட அவர் தான் உட்கார வைத்ததே. அர்ச்சனா உள்ளே வந்ததற்கு முன்னாடி கூட ரியோ, நிஷா போன்றோர் நன்றாக தான் விளையாடினர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் அர்ச்சனா கால் எடுத்து வைத்ததில் இருந்து அன்பு, அன்பு என்றே சுற்றி திரிந்தனர். எல்லா இடத்திலேயும் முந்திக்கொண்டு வருவது. யாரையும் பேச விடாமல் செய்வது என செய்துகொண்டிருந்தார். அர்ச்சனாவை பலருக்கும் பிடிக்காமலே போனது. வாராவாரம் எப்படியோ தப்பித்து விட்டார் அர்ச்சனா.
ஆனால் போன வாரம் நிஷா வெளியேறியது அந்த அன்பு கேங்க்கு பெரிய ஷாக். ஆனால் அனிதா தான் சாதித்து விட்டதாக பீத்தி கொண்டிருக்கிறார். இந்நிலையில் அர்ச்சனா எப்பொழுது வெளியேறுவார் என காத்திருந்தவர்களுக்கு நேற்று நடந்த எவிக்ஷன் சந்தோஷமாகவே இருந்திருக்கும். நாம் ஒன்று கேட்டால் அதற்கு பெரிய காரணம் சொல்வது. இதையே அர்ச்சனா வழக்கமாக வைத்திருந்தார்.
இப்பொழுது வெளியே வந்த அர்ச்சனாவை பலரும் கண்டிப்பாக திட்டி இருப்பர். அடுத்து அவர் ஜீ தமிழுக்கு போவாரா?? அல்லது விஜய் டிவியில் இருப்பாரா?? என்பது தெரியவில்லை. இந்நிலையில் அவர் தனது முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.