பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் அபிஷேக்கின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
பிக் பாஸ் 5
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் தான் அபிஷேக்கின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வீட்டில் உள்ளவர்கள் அனைவரை விடவும் அபிஷேக்கின் குரல் தான் அதிகமாக ஒலித்து கொண்டுள்ளது. இத்தனை வாரங்களில் ப்ரோமோவில் ஹைலைட்டே அபிஷேக் தான்.
இந்நிலையில் தான் இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் தனது ஒட்டுமொத்த குணத்தையும் காட்டிவிட்டார் அபிஷேக். ராஜுவிடம் உன்னையும் அக்சராவையும் பிரிக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா?? என்று நேரடியாகவே கேட்கிறார். அதற்கு ராஜுவும் மேலும் பிரியங்காவிடம் உங்க கூட இருந்துகிட்டே உங்கள ஒருத்தன் வச்சு செஞ்சுட்டு இருக்கான் என்று சொல்கிறார்.
ஆமா நான் அப்படி தான் என்று ஒத்துக்கொள்கிறார் அபிஷேக். பிரியங்காவிடம் ஓட்டினால் தான் நான் கேமராவில் தெரிவேன் என்று சொல்ல அப்பொழுது அண்ணாச்சியும் அங்கு வருகிறார். அவரிடமும் உங்க கூட சண்டை போட்டா தான் நான் கேமராவில் தெரிவேன் என்று சொல்கிறார். அண்ணாச்சி அதற்கு நெத்தியடியாக இதெல்லாம் ரொம்ப அசிங்கம் என்று சொல்லி பேச்சை விடுகிறார். இந்த ப்ரோமோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்