மீண்டும் முட்டிக்கொள்ளும் ஆரி, ரியோ – அர்ச்சனா வந்த தைரியமா?? கடுப்பில் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பழைய போட்டியாளர்கள் உள்ளே வந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது சம்யுக்தா மற்றும் சனம் ஷெட்டியும் உள்ளே வந்துள்ளனர்.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவராலும் பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோ. கடந்த 3 பிக் பாஸ் நிகழ்ச்சியும் வெற்றிகரமாக ஒளிபரப்பானது. ஆனால் இந்த சீசன் மக்களால் பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு ஒளிபரப்பானது. மேலும் இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்தது.

ஆனால் அதற்குள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. மேலும் மக்கள் மத்தியிலும் இந்த சீசன் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசன் டைட்டில் வின்னர் யாராக இருப்பார் என்று பார்த்தால் மக்கள் பலரும் ஆரியை தான் குறிப்பிடுகின்றனர். ஆரியா?? பாலாவா?? என பனிப்போரே போயிக்கொண்டுள்ளது.

ஆரம்பத்தில் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ரியோவும் அர்ச்சனா கேங்கில் சிக்காமல் இருந்து இருந்தால் கண்டிப்பாக அவரும் ஜெயிப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனாலும் கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

போன சீசனில் கூட தர்ஷன் தான் ஜெயிப்பார் என பலரும் கூறி வந்த நிலையில் அவர் திடீரென வெளியேறினார். இது பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. இப்பொழுது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. நேற்று அர்ச்சனா, நிஷா போன்றோர் எதிர்பாராத விதமாக என்ட்ரி கொடுத்தனர்.

இன்று சனம் மற்றும் சம்யுக்தா என்ட்ரி கொடுத்துள்ளனர். பாலா சம்யுக்தாவை பார்த்து கண்கலங்கிய விட்டார். ஏனெனில் வீட்டில் இருந்து வரை சம்யுக்தா தான் பாலாவை நன்றாக பார்த்துக்கொண்டார். அவருக்கு முழு சப்போர்ட் கொடுத்தியதும் சம்யுக்தா தான். மேலும் சனமும் உள்ளே வந்துள்ளார்.

இன்றைய ப்ரோமோவிலும் வழக்கம் போல சண்டைகள் நிகழ்ந்துள்ளது. எதோ ஒரு குரூப் டிஸ்கஷன் நிகழ ஆரி யோசித்துக்கொண்டே சரி என்று கூறுகிறார். ரியோவும் மறுபடியும் கேட்க ஆரி கோவமடைகிறார். பழையபடியே சண்டையில் தான் ப்ரோமோ முடிவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here