அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கும் பாலாஜி முருகதாஸ் – தெறிக்கும் ப்ரோமோ!!

0
bigg boss

பிக் பாஸ் சீசன் 4 இல் தற்போது மூன்றாவது வாரம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் பல டாஸ்க்குகளை கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் இடையே பல சண்டைகள் ஏற்படுத்தி வருகிறார். தற்போது வெளியிட்ட ப்ரோமோவில் பாலாஜி, அர்ச்சனா இடையே சில சண்டைகள் உருவாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. ஆரம்பத்தில் சந்தோசமாக காட்டப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது சண்டையிட்டு வருகின்றனர். மேலும் பாலாஜி திமிராகவும் நடந்து கொள்கிறார். நேற்றைய எபிசோடில் பட்டிமன்ற போட்டி நடைபெற்றது. அதில் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வந்தனர்.

bigg boss

அதில் கடைசியாக பாலா, அர்ச்சனாவின் கருத்தில் குறை கூறியதால் கடுப்பான அர்ச்சனா பேசாமல் இருந்து விட்டார். மேலும் சில டாஸ்குகளில் அர்ச்சனாவிற்கும், பாலாவிற்கும் தொடர்ந்து பல மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் அர்ச்சனா எதோ பிக் பாஸ் லீடர் போல நடந்து கொள்கிறார். அவர் வந்த நாளில் இருந்து அவரின் குரல் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் ஒலித்துக் கொண்டுள்ளது.

bigg boss

மேலும் குரூப்பிஷம் என்று அர்ச்சனா, ரியோவும் ஆரம்பித்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இதனை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதாக இல்லை. மேலும் நேற்று அனைவரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட வேண்டும் என்று வாக்குவாதம் வேறு நடந்தது. அதில் ரம்யாவிற்கும், ரியோவிற்கும் இடையே சிறிய கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் போட்டியாளர்களை பதினாறில் இருந்து வரிசை படுத்த வேண்டும்.

bigg boss

அதில் முதல் இடம் பிடிக்கும் நபர் பிக் பாஸ் போட்டியாளர் என்று கருதப்படுவார். அதனை தொடர்ந்து வரும் எண்ணிக்கை ஒவ்வொரு வார எலிமினேஷனை குறிக்கும். 16 வதாக இருப்பவர் இந்த வாரம் வெளியேறப் போகும் நபராக இருக்கலாம். இவ்வாறு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதிலும் அர்ச்சனவே பேசுகிறார். இதனால் கடுப்பாகும் பாலா அர்ச்சனாவை எதிர்த்தும் பேசுகிறார். இந்நிலையில் எலிமினேஷனில் இருப்பதால் அனிதாவும் அமைதியாக உள்ளார். 16 வது இடத்தில் சுரேஷ் உள்ளார். மேலும் இந்த எண்ணிக்கையில் நிற்க போட்டியாளர்கள் இடையே கடும் வாக்குவாதமும் நிகழ்ந்து வருகிறது.

bigg boss

இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது எலிமினேஷனில் இருக்கும் 5 நபர்களில் அனிதா வெளியேற அதிக வாய்ப்புள்ளது. இந்த வாரத்தில் சனம் நாமினேஷன் ஆகி இருந்தால் சனம் தான் வெளியேறி இருப்பார். மேலும் அர்ச்சனாவுக்கு எதிராகவும் பலரும் பேசி வருகின்றனர். அர்ச்சனா, ரியோ மற்றும் அனிதா தனக்கு இருக்கும் பெயரை கெடுத்து கொண்டு தான் வெளியேறுவார்கள் என்பது தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here