கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற உள்ள மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட உளளதாக வெளியான தகவல் போலியானது என சிபிஎஸ்இ சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா பரவல் முடிவடைந்த பிறகு தேர்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடங்களில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமான ஒன்றாகும். இதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் வகையில் இருந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று வாழ்நாள் முழுவதும் செல்லும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பணியில் சேர வயது ஒரு தடையில்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்து உள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதற்கிடையில் மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். இம்முறை கொரோனா பரவல் காரணமாக பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில், இத்தேர்வுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்கள் பரவியது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதற்கு சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து வெளிவந்த தகவல் போலியானது என்றும், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தவுடன் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.