விஜய் டிவியின் பயங்கர வில்லிகள் இணைந்து எடுத்த கொண்ட செல்பீ – இணையத்தை தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மனதியில் பெரும் வெறுப்பினை சம்பாரித்த அர்ச்சனா மற்றும் வனிதா விஜயகுமார் இருவரும் இணைத்து ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிக் பாஸ் பிரபலங்கள்

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான், “பிக் பாஸ்” இந்த நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படும் 15 முதல் 18 நபர்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருப்பர். அவர்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். இப்படியாக இந்த போட்டிகள் மூலமாக பலர் பிரபலமடைந்து உள்ளனர். ஒவ்வொரு சீசனிலும் பலர் பிரபலம் அடைவர். சிலர் நெகட்டிவாக மக்கள் மனதில் நிலைத்து விடுவர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி – கலக்கத்தில் கட்சியினர்!!

அந்த வகையில் கடந்த “பிக் பாஸ் 3” நிகழ்ச்சியில் மக்கள் மனதில் பெரும் வெறுப்பினை சம்பாரித்தவர் தான், வனிதா விஜயகுமார். இவர் அந்த வீட்டில் சண்டை போடாத ஆளே கிடையாது என்று தான் கூற வேண்டும். இவர் தனது நட்பு வட்டாரத்துடன் கூட சண்டை போட்டார். அதே போல ஒருவரை பற்றி மற்றவர்களிடம் தப்பாக கூறினார். இதனாலே அனைவரும் வெறுத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் என்றால் அது, அர்ச்சனா தான். இவர் மக்கள் மத்தியில் நல்ல பெயரினை எடுத்தவர். ஆனால், பிக் பாஸ் வீட்டில் இவர் மற்றவர்களை அன்பு என்ற பெயரில் விளையாட விடாமல் செய்தார். வனிதா மற்றும் அர்ச்சனா இருவருமே ஒரே வேலையை தான் செய்தனர் ஆனால், சற்று வித்தியாசமாக, அவ்வளவே.

இப்படியாக இருக்க, இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு புகைப்படத்தினை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தினை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here