மாஸ்க் அணியாவிட்டால் ரூ.10,000, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் – மாநில அரசு அதிரடி!!

0

நாட்டில் கொரோனா தொற்றினால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக விதித்து வருகிறது.

மாஸ்க் கட்டாயம்:

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கட்டுக்குள் வந்த கொரோனா நோய்த்தொற்று தற்போது மீண்டும் வேகமெடுக்க துவங்கியுள்ளது. கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாவது அலை மக்களை மிக அதிகமான அளவில் பாதித்து வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மிக கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதேபோல் பல மாநிலங்களில் முழு நேர மற்றும் பகுதி நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் அனைவரையும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் அனைத்து மாநிலங்களிலும் மாஸ்க் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற தவறுபவர்களிடம் கடுமையான அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி – கலக்கத்தில் கட்சியினர்!!

தற்போது அந்த வகையில் உத்திர பிரதேச மாநில அரசு ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மாஸ்க் அணியாமல் சென்றால் முதன்முறை ரூ.1000 அபராதமும் மற்றும் தொடர்ந்து மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் என்று உ.பி அரசு அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here