எனக்கு இப்போ தான் குழந்தை பிறந்திருக்கு, நான் எப்படி பிக் பாஸ் வருவேன்’ – நகுல் பளிச் பேட்டி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் தான் பங்கேற்க இருப்பது குறித்து நடிகர் நகுல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திலேயே நடிகர் நகுல் இதனை தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் என்று நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் 15 பேர் 100 நாட்கள் ஒரே வீட்டிற்குள் இருப்பர். அவர்களில் யார் மக்கள் மனதினை கவர்கிறார்களோ அவர்களே போட்டியில் வெற்றி அடைவர். இந்த நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் மினி ஊரடங்கு?? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி பொது முடக்கம் காரணமாக தாமதமாக தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு கூடிய விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்று பிக் பாஸ் குழு முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் நகுல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது குறித்து நகுல் கூறியதாவது “தன்னிடம் பிக் பாஸ் குழுவினர் இது குறித்து பேசவில்லை. அப்படி அவர்கள் கூறினாலும் நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை. எனக்கு தற்போது தான் மகள் பிறந்துள்ளார். நான் எப்படி அவளை விட்டு வருவேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இதனை ஒரு விடியோவாகவே அவர் தெரிவித்துள்ளார்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here