தமிழகத்தில் மினி ஊரடங்கு?? சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மினி ஊரடங்கு தான் போடப்படும் முழு ஊரடங்கு போடப்படாது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகம்:

கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. இதன் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் உயர்கல்வி பள்ளி மற்றும் கல்லூரிகள் துவக்கப்பட்டது. பின்பு யாரும் எதிர்பாராத வகையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவ தொடங்கியுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கொரோனா பரவல் காரணமாக தற்போது 12ம் வகுப்பை தவிர மற்ற வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் தமிழகத்தில் முழு அளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு குறித்து அந்தந்த மாநிலங்கள் நிலவரத்திற்கேற்ப முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஊரடங்கு விரைவில் பிறப்பிக்கப்படும் என்ற செய்தி அதிகமாக பரவி வந்தது.

தோல்வி பயத்தால் தான் இந்த ஐடி ரைடு – அதிமுகவை வறுத்தெடுத்த துரைமுருகன்!!

தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்னன் ஓர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் முழு அளவில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் மினி ஊரடங்கு போடப்படலாம். மினி ஊரடங்கு என்றால் பாதிப்பு அதிகமுள்ள தெரு, பகுதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்படலாம், மக்கள் தவறாக பரவும் செய்தியை எண்ணி அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here