தோல்வி பயத்தால் தான் இந்த ஐடி ரைடு – அதிமுகவை வறுத்தெடுத்த துரைமுருகன்!!

0

இன்று 20 வாகனத்தில் சென்று எ.வ.வேலுவின் வீடு, கல்லூரி என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தற்போது இதுகுறித்து திமுகவின் துரைமுருகன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

துரைமுருகன்:

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. மேலும் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தற்போது பிரச்சார வேளைகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் தனது பிரச்சார வேலைகளை செய்து வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது திடிரென்று திமுக வேட்பாளரான எ.வ.வேலுவின் இல்லத்திற்கு வருமானவரித்துறையினர் சோதனைக்காக குவிந்தனர். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக பணத்தை பதுக்கியுள்ளதாக கூறி அவரது வீடு, கல்லூரி மற்றும் ஸ்டாலின் தங்கியிருந்த எ.வ.வேலுவின் கல்லூரி, விடுதி ஆகியவற்றை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அங்கு ஒன்றும் சிக்கவில்லை.

புதுச்சேரியில் மருத்துவ படிப்புக்காக 10% இட ஒதுக்கீடு நிராகரிப்பு – மத்திய அரசு அதிரடி!!

தற்போது இதுகுறித்து பேசிய துரைமுருகன், வருமானவரித்துறையின் சோதனையில் ஒன்றும் சிக்கவில்லை. அதிமுக அரசு தான் பாஜகவை தூண்டிவிட்டு இந்த ஐடி ரைடை நடத்தியுள்ளது. தோல்வியின் பயத்தில் தற்போது அதிமுக அரசு இதனை செய்தது. எங்களை இந்த ரைடு மூலம் அச்சமடைய வைக்க முடியாது நாங்கள் எதற்கும் அஞ்சமாட்டோம் என்று அதிமுகவை வறுத்தெடுத்துள்ளார் திமுகவின் துரைமுருகன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here