சையத் முஷ்டாக் அலி டிராபி 2023 T20 தொடர் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி முதல் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கிய ஆட்டத்தில் கர்நாடகா, உத்தரபிரதேசம் அணிகள் மல்லுகட்டின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த உத்தரபிரதேச அணி 20 ஓவர்களில்4 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்தது.
Enewz Tamil WhatsApp Channel
அதன் பிறகு 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கர்நாடகா அணி களமிறங்கியது. அப்பொழுது உத்தரபிரதேச அணியின் புவனேஷ்வர் குமார் சிறப்பாக செயல்பட்டு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் விளைவாக 40 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணி அபார வெற்றி பெற்றது. இவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும், இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்குமே சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.