பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி முட்டாள்தனமாக வெண்பா கழுத்தில் தாலி கட்டுவதற்கு ஒத்துக்கொள்கிறார். வெண்பாவின் சதி திட்டம் தெரியாமல் இப்படி போய் விழுந்துட்டாரே என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அது என்ன.., கண்ணம்மாவிற்கு ஒரு நியாயம்., வெண்பாவிற்கு ஒரு நியாயமா?? ஆரம்பத்தில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த சீரியலில் இப்படி லாஜிக்கே இல்லாத கதையை வைத்து சொதப்பி வருகிறார் பிரவீன் பென்னட்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த சீரியலும் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்பொழுது பாரதி வெண்பா திருமணம் நடக்குமா?? நடக்காதா என்ற குழப்பம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் இனிமேல் தான் ட்விஸ்ட்டே. அதாவது பாரதி மீது பழியை போடுவதற்காக எல்லா திட்டத்தையும் போடும் வெண்பா கடைசியில் பாரதியின் வீட்டிற்கு வந்து இந்த குழந்தைக்கு பாரதி தான் அப்பா என்று பிரச்சனை செய்வாராம்.
அதன் பிறகு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து இதனால் பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்வாராம் பாரதி. அதன் பிறகு வெண்பா செத்து விடுவது போல நடித்து தலைமறைவாகி விடுவாராம். அந்த பழியும் பாரதி மேல் விழுந்து ஜெயிலுக்கு சென்று விடுவாராம் பாரதி.