இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டி இன்று தொடங்க உள்ளது.
IND VS SA 3T20
இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான கடைசி T20 போட்டியில் இன்று மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா தொடரை வென்று விட்ட நிலையில், மூன்றாவது போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்ய காத்துக் கொண்டுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணிக்கான ப்ளெயிங் 11 னில் அதிக மாற்றங்கள் ஏற்படலாம் என தெரிகிறது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி, சூர்ய குமார் போன்ற வீரர்கள் களமிறங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர்களுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஆகியோர் களமிறங்குவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இந்தியா விளையாடும் கடைசி T20 போட்டி இதுவாகும் எனவே இந்த போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மறுபுறம் தென்னாபிரிக்க அணி தொடர் தோல்விகளை சந்தித்து உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த 3 வது போட்டியிலாவது தென்னாபிரிக்க அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.