தமிழக மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்! கல்வித்துறை உத்தரவு!!

0
தமிழக மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு - பள்ளிகள் திறப்பில் அதிரடி மாற்றம்! கல்வித்துறை உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான, காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்த முக்கியமான தகவல் ஒன்று, கல்வித்துறை வாயிலாக சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை வெளியீடு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது மாணவர்கள் விடுமுறையில் இருந்து வருகின்றனர். இந்த உத்தரவில் ஏற்கனவே பல மாற்றங்கள் செய்யப்பட்டு 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி வரையும், 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வருகிற 10.10.2022 அன்று திறக்கப்பட வேண்டும் என, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here