பாரதி கண்ணம்மாவில், கண்ணம்மா விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் பொழுது சௌந்தர்யா வந்து தடுக்கிறார். மேலும் கண்ணம்மாவின் இரண்டாம் குழந்தை ஹேமா என்ற உண்மையையும் போட்டு உடைக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மாவின் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் இன்னொரு குழந்தை ஹேமா என்று சௌந்தர்யா சொன்னதும் கண்ணம்மா நம்பாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டு சத்தியம் செய்ய சொல்கிறார்.
மேலும் இரண்டாம் குழந்தைக்கு நான் தான் பிரசவம் பார்த்த உண்மையையும் சொல்கிறார். ஹேமா அப்பா பாசத்தோட கார் பங்களான்னு சந்தோசமாக இருப்பதாக சொல்ல கண்ணம்மா மகிழ்ச்சியில் சௌந்தர்யாவை இறுக அணைத்து கொள்கிறார்.
இருப்பினும் 8 வருடம் தன் பிள்ளையை பிரித்ததற்காக கோவப்படுகிறார். ஆனால் உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கவே ஒரு குழந்தையை தன்னிடம் கொண்டு சென்றதாக சௌந்தர்யா சொல்கிறார்.
இதை தொடர்ந்து உன் குழந்தை பிச்சை எடுப்பதாக இவ்வளவு நாள் மிரட்டியது யார் என கேக்க சௌதர்யாவே அது வெண்பா தான் என்று புரிந்து கொள்கிறார். வெண்பாவை சும்மா விடமாட்டேன் என கோவத்தில் சௌந்தர்யா செல்ல ஏதாவது தவறாக நடந்து விடுமோ என்று கண்ணம்மா பதறுகிறார்.
இதோடு இன்றைய பாரதி கண்ணம்மா எபிசோடு முடிகிறது.பின்னர் நாளை வரும் எபிசோடின் காட்சிகள் காட்டப்படுகிறது. அதில் வெண்பாவை சௌந்தர்யா ஆத்திரத்தில் கீழே தள்ளி தன் துப்பாக்கியால் சுடுகிறார். உண்மையாகவே சௌந்தர்யா வெண்பாவை சாகடிக்க பார்க்கிறாரா என்பதை அடுத்து வரும் எபிசோடுகளில் காணலாம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்