தமிழ் சினிமாவில் வெற்றியை நாட்ட போராடி வரும் நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெய். ஆரம்பத்தில் நல்ல கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இவர் சமீப காலமாக கொஞ்சம் கோட்டை விடுகிறார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான எந்த திரைப்படமும் சொல்கின்ற அளவுக்கு சரியாக போகவில்லை. இருந்தாலும் அவர் விடா முயற்சியுடன் தொடர்ந்து நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இது ஒரு பக்கம் இருக்க இவர் பல காதல் கிசுக்களிலும் சிக்கி வருகிறார். ஏன் சமீபத்தில் கூட வாணிபோஜனுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் அவர் வாழ்ந்து வருகிறார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த ஹீரோயின் தரப்பில் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
சினேகா-பிரசன்னா விவாகரத்து.., வெளிவந்த மொத்த உண்மை.., இனி எதுவும் நடக்க வாய்ப்பில்லையே!!
இந்நிலையில் ஜெய்யும் அஞ்சலியும் ஒன்றாக வீட்டில் வாழ்ந்து வந்தார்கள் என பயில்வான் ரங்கநாதன். கொளுத்தி போட்டு உள்ளார். அதாவது அவர் கூறியதாவது, எங்கேயும் எப்போதும் படத்தில் இருந்து ஜெய்க்கும் அஞ்சலிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருவான்மியூர் பீச்சில் தனியாக பிளாட் வாங்கி குடும்பம் நடத்தி வந்தனர்.
கொஞ்சம் நாட்கள் கடந்த நிலையில் ஜெய் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் அஞ்சலியை மனரீதியாக அதிகமாக காயப்படுத்தியுள்ளார். அவர் இன்று சரி ஆவார், நாளை சரி ஆவார் என்று எதிர்பார்த்த அஞ்சலிக்கு அது கனவாகவே போனது, ஒரு கட்டத்தில் இவருடன் இருக்க முடியாது என்று பிரிந்து சென்றனர். தற்போது இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருந்து வருகின்றனர்.