தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் பாவனா. இடையில் இவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் திரையுலகத்திற்கு தலை காட்டாமல் இருந்தார். இவருக்கு தற்போது தான் திருமணமும் நடந்தேறியது. தற்போது தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் பாவனா தற்போது நைட்டி போன்ற உடை அணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பாவனா
தமிழில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் பாவனா. தனது முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தன. வெயில் படத்தில் அவர் அப்பாவி பெண்ணாக நடித்திருந்தது பலரையும் ஈர்த்திருந்தது. மேலும் பிரபல நடிகையாகவும் வலம் வந்தார்.
தமிழில் மட்டுமல்ல மலையாளம், கன்னடம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் பாவனா. சமீபத்தில் இவரை மலையாள நடிகர் ஒருவர் கடத்தியதாக பல சர்ச்சைகளும் உருவானது. தமிழில் இவருக்கு அஜித் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அசல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
தீபாவளி படமும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. அதன் பிறகு அவர் தமிழில் வேறு படங்களில் எதுவும் நடிக்கவில்லை. அசல் படமே அவரின் கடைசி படம். மேலும் இவர் நரேன் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் சமீப காலமாக அவர் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது தான் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறதே. ஒரு வேலை இவரும் பட வாய்ப்புகளுக்கு அடிபோடுகிறாரோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தற்போது அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.