பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா உயிருக்கு போராடி வருகிறார். இந்நிலையில் தற்போது வெண்பா போலீஸிடம் சிக்கியது போல புகைப்படம் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. ஹேமாவை பாரதி அமெரிக்காவிற்கு அழைத்து செல்வாரா?? என்று பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் ஏர்போர்ட் போகும் வழியில் ஹேமாவிக்ரு திடீரென ஃபிக்ஸ் வருகிறது.
இதனால் குடும்பமே துடித்து போகிறது. ஹேமா உயிருக்கு ஆபத்து வராமல் இருக்க அந்த சமையல் அம்மா கண்டிப்பாக வரவேண்டும் என்றும் சொல்கிறார். சௌந்தர்யா தன்னால் இது முடியாது என்றும் பாரதி தான் போக வேண்டும் என்று சொல்ல பதறி அடித்து கண்ணம்மாவை அழைத்து வர செல்கிறார்.
இப்படி சீரியல் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. இனி ஹேமாவை வைத்து பாரதியும் கண்ணம்மாவும் எப்படி ஒன்று சேருவார்கள் என்பது தான் பெரிய ட்விஸ்ட். இந்நிலையில் தற்போது இணையத்தில் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது வெண்பா போலீசில் மாட்டி கொண்டது போன்ற புகைப்படம் தான் அது.
வெண்பா பிரச்சனையில் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. ஒருவேளை ஹேமாவை கடத்திய வழக்காக இருக்குமோ என்றும் ஒரு வட்டாரம் கூறி வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது வரும் எபிசோடுகளில் பல முக்கியமான விஷயங்கள் நடக்க இருப்பது தெரிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்