தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவும், வேணுவும் வெளியூர் சென்றதை அடுத்து பாரதி வெண்பாவை திருமணம் செய்ய தயாராகிறார். மேலும் இது சரியா?? தப்பா?? என்று புலம்பிக்கொண்டும் உள்ளார்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு பாரதி மேல் இருக்கும் கோவம் ஓரளவிற்கு தணிகிறது. ஏனெனில் கோவத்தை பொருட்படுத்தாமல் குழந்தைக்கு ஆபரேஷன் செய்ததால் அவர் மீது ஒரு அபிப்ராயம் வருகிறது. மேலும் கண்ணம்மா குழந்தையிடமும் பாரதியை பற்றி கூறினார். மேலும் பாரதி வெண்பாவை திருமணம் செய்து கொண்டது சரியா?? தவறா?? என்று யோசித்து குடித்து விட்டு வருகிறார். இது எப்படியோ சௌந்தர்யாவிற்கும் தெரியவர அவரை திட்டுகிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இன்றைய எபிசோடில் கண்ணம்மா குழந்தைக்கு சரியானதும் இந்த ஊரை விட்டே செல்ல போவதாக கூறுகிறார். துளசி எவ்வளவு கெஞ்சியும் கண்ணம்மா கேட்பதாக இல்லை. அடுத்ததாக பாரதியை காட்டுகின்றனர். குடிபோதையில் இருக்கும் பாரதிக்கு வெண்பா கால் செய்கிறார்.
நாளைக்கு திருமணம் நடக்க போவதை சொல்லி மகிழ்ச்சியடைகிறார். ஆனால் பாரதிக்கு என்னவோ போல் உள்ளது. இதனால் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறார். நாளை முழுவதும் உன் கூட தனியாக இருக்கணும், பௌர்ணமி வெளிச்சத்துல உட்கார்ந்து உன்கிட்ட நெறைய பேசணும் என்று சொல்ல பாரதிக்கு குடிபோதையில் ஒன்றுமே புரியவில்லை.
குழப்பத்தில் இருக்கும் பாரதிக்கு அவரின் அம்மாவின் முகம் தெரிகிறது. நீ செய்வது சரியா?? உன்னை நம்பி ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்ல பாரதிக்கு பைத்தியம் பிடிப்பது போல உள்ளது. அடுத்ததாக வேணுவின் உருவம் தெரிகிறது.
வாழ்க்கையில் ஒரு தப்பை பண்ணிட்டு மறுபடியும் அதே தப்பை செஞ்சா என்ன அர்த்தம் என்று கேட்க அடுத்ததாக கண்ணம்மா உருவம் தெரிகிறது. நீ பாட்டுக்கு என் மேல பழியை போட்டுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிப்ப நான் என்ன கேனையா?? நான் போலீஸ் கம்பளைண்ட் கொடுப்பேன். ஒழுங்கா டெஸ்ட் எடுக்க வா என்று சொல்ல பாரதிக்கு மிகவும் குழப்பமாகிறது.
அடுத்ததாக அகிலன் வேறு தோன்ற கண்ணம்மா அண்ணிக்கு இப்படி துரோகம் பண்ண எப்படி உனக்கு மனசு வருது என்று கேட்க உச்சக்கட்ட குழப்பத்தில் தூங்குகிறார். காலையில் ஒருமனதாக கல்யாணத்திற்கு கிளம்புகிறார் பாரதி. பட்டு வேஷ்டி கட்டி கிளம்பும் பாரதியை அனைவரும் சந்தேகிக்கின்றனர். அகிலன் போறவழியில் என்ன இறக்கிவிட்டு என்று சொல்ல வேறு வழியில்லாமல் அழைத்து செல்கிறார்.
அப்பொழுது பூனை வேறு குறுக்கே செல்கிறது. அடுத்ததாக காகம் வேறு கத்த ஆரம்பிக்க அபசகுனமாக இருப்பதாக அகிலன் கூறுகிறார். ஆனால் எதையும் காதில் வாங்காமல் செல்கிறார் பாரதி. இதோடு எபிசோடும் முடிவடைகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் எப்பொழுது முடியும் என்றும் கடுப்பாகி வருகின்றனர். இல்லையென்றால் பாரதிக்கு உண்மை தெரியவர வேண்டும். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்ன அர்த்தம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.