சட்டசபை தேர்தலுக்கு பின் பொதுத்தேர்வுகள்?? தமிழக கல்வித்துறை விளக்கம்!!

0

தமிழகத்தில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவமாணவிகளுக்கு பொது தேர்வினை அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா நோய் பரவல் அச்சம்:

இந்தியாவில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கடத்த மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் பின்பற்றபட்டு வருகின்றது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தாலும், மக்களின் பொருளாதார நிலையினை கருத்தில் கொண்டு பொது முடக்கம் தற்போது தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அரியர் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!!

இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசு ஆன்லைன் வாயிலாக பாடங்களை நடத்த அனுமதி அளித்தது. அதன் படி கல்வியாண்டு தொடங்கி 7 மாதங்களை நிலையில் மாணவர்கள் தற்போது வரை பள்ளிகளுக்கு வராமல் தான் ஆன்லைனில் பாடங்களை கற்று வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த நிலையில், பொது தேர்வுகளை சட்டமன்ற தேர்தல் பிறகு வைத்துக் கொள்ளலாமா? என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும் இறுதி முடிவு குறித்து அறிவிக்கப்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here