பார்தி கண்ணம்மா சீரியலில் இதுவரை மெகா சங்கமமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் இன்றோடு எபிசோடுகள் முடிவடையவுள்ளது. இதனை கேட்ட பலரும் கவலையில் உள்ளனர்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா தற்போது அகிலனிடம் கையும் களவுமாக மாட்ட இருந்த நிலையில் எப்படியோ தப்பித்து விட்டார் வெண்பா. மேலும் பாரதி வேறு தொடர்ந்து வெண்பாவிற்கு சப்போர்ட் செய்துகொண்டிருப்பது அங்கு யாருக்குமே பிடிக்கவும் இல்லை. ஆனால் இந்த நிலையிலும் வெண்பாவிற்கு ஓவர் தைரியம் தான்.
ஏனெனில் இவ்வளவு அசிங்கப்பட்டு மீண்டும் வேணுவிடம் சென்று எத்தனை நாள் தான் பாரதி இப்படி தனியா இருந்து இருந்து கஷ்டப்படுவாரு என்று கேட்க அதற்கு அகிலன் கேவலமாக பேசி விடுகிறார். மேலும் சௌந்தர்யாவும் பூவை வச்ச இடத்துல குப்பையை வைக்க முடியாது என்று சொல்கிறார்.
இதனால் வெண்பாவிற்கும் அசிங்கமாகி விடுகிறது. இப்படி பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா நகர்ந்துகொண்டிருந்த இந்த வேளையில் இன்றோடு இந்த மெகா சங்கமம் முடிவடைகிறது.
ஏடிஎம்மில் பண பரிவர்த்தனைக்கான கட்டணம் அதிகரிப்பு… ரிசர்வ் வங்கி அறிவிப்பால் அதிர்ச்சி !!!
இரு குடும்பமும் ரெசார்ட்டை விட்டு கிளம்புகின்றனர். இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். திங்களில் இருந்து மீண்டும் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாகுமா?? அல்லது இனி ஷூட்டிங் ஆரம்பித்தால் தானா?? என்றும் தெரியவில்லை. இதனால் இல்லத்தரசிகள் வேதனையில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ்ஆப் – Enewz Tamil வாட்ஸ்ஆப்