ஸ்கூல் நிகழ்ச்சியில் சந்திக்கும் பாரதி, கண்ணம்மா – லட்சுமியை பற்றி தெரியவருமா?? வெண்பா செய்யும் சதித்திட்டம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஸ்கூலில் நடக்கும் ஆண்டு விழாவிற்காக பாரதி குடும்பத்தில் அனைவரும் வருகின்றனர். மேலும் கண்ணம்மா வேறு லட்சுமியை அழைத்து வருகிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் கண்ணம்மா ஸ்கூலுக்கு கிளம்பி கொண்டிருக்க லட்சுமி தானும் வருவதாக ஆடம் பிடிக்கிறார். மேலும் சுமதியின் கையில் உள்ள தழும்பை பார்த்து கண்ணம்மாவிற்கு சந்தேகம் அதிகமாகிறது. அதனுடன் லட்சுமி வேறு பாரதியை பார்த்து நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் கடுப்பாகும் லட்சுமி ஆட்டோவில் போகும்போது லட்சுமியை கண்டபடி திட்டுகிறார். அதன் பிறகு மன்னிப்பும் கேட்கிறார். அடுத்ததாக சௌந்தர்யா குடும்பம் மொத்தமும் ஸ்கூலுக்கு வருகின்றனர். ஹேமா சமையல் அம்மா வரலையே இன்னும் என்று தேடுகிறார்.

சௌந்தர்யா பாரதியிடம் சமையல் அம்மாவை நம் வீட்டில் வேலைக்கு வைத்து கொள்ளலாமா?? என்று கேட்கிறார். அதற்கு பாரதி மறுக்கிறார். அதாவது இப்போதே எப்போ பாத்தாலும் சமையல் ஆண்ட்டினு சொல்லிட்டு இருக்கா. அப்பறம் சுத்தமா என்ன மறந்துடுவா என்று சொல்கிறார்.

பும்ராஹ் அனுபமா திருமணம்?? இணையத்தில் கசிந்த தகவல்!!

அனைவரும் உள்ளே செல்ல கண்ணம்மாவும் லட்சுமியும் வருகின்றனர். லட்சுமி கண்ணம்மாவை முதல் சீட்டில் உட்கார சொல்கிறார். கண்ணம்மா எவ்வளவு மறுத்தும் ஆடம் பிடித்து உட்கார மறுக்கிறார். அப்பொழுது அங்கு வேலை பார்க்கும் ஒருவர் இது விஐபி உட்கார வேண்டிய இடம் என்று கூறுகின்றனர்.

இதனால் கோவமடையும் லட்சுமி இங்கிருந்து செல்லலாம் என்று கூறுகிறார். கண்ணம்மா அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக கண்ணம்மாவிற்கு கால் வர அதனை பேச வெளியே செல்கிறார். அப்பொழுது பாரதியை பார்த்து விடுகிறார் ஹேமா. பாரதியிடம் போய் பேசுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தன் அம்மா இங்கே தன் வேலை செய்வதாக சொல்கிறார். அம்மாவை அழைத்துக்கொண்டு வருவதாக சொல்கிறார். அப்பொழுது வெண்பா அங்கு வந்து விட லக்ஷ்மியை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அதாவது லட்சுமி கண்டிப்பா கண்ணம்மா கூட தான் வந்திருப்பா, இப்போ பார்த்த தப்பாகிடுமே என்று பயப்படுகிறார்.

அடுத்ததாக கண்ணம்மா இந்த ஸ்கூலில் லக்ஷ்மியை படிக்க வைக்க முடியவில்லையே என்று வருத்தப்பட அங்கு வரும் சுமதி இந்த ஸ்கூலில் இலவச வசதி உண்டு லட்சுமிகாக எழுதி போடலாம் என்றும் சொல்கிறார். இந்த பக்கம் வரும் வழியில் பாரதி நிற்க கண்ணம்மாவும் பாரதியும் சந்தித்து கொள்வார்களா?? வெண்பா என்ன செய்ய போகிறார்?? என்பதை அடுத்த எபிசோடில் பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here