அகிலனிடம் தன்னை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்ல கட்டாயப்படுத்தும் ஹேமா – சூடுபிடிக்கும் கதைக்களம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவை சௌந்தர்யா சந்திப்பரா?? மாட்டாரா?? என விறுவிறுப்பாக ஓடிக்கொடுள்ளது. இந்நிலையில் தற்போது ஹேமா காலில் உள்ள கொலுசை கண்டுபிடிக்க அவரது அகிலனை கண்ணம்மா வீட்டிற்கு அழைத்து செல்கிறார் ஹேமா.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் மாட்டி தவித்துக்கொண்டுள்ளார் வெண்பா. டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் பாரதி வீட்டில் மாட்டிக்கொண்டுள்ளது. அதனை எப்படி எடுப்பது என்று குழம்பி போய் உள்ளார் வெண்பா.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பாரதியும், வெண்பாவின் அதனை ரூமில் அனைத்து இடங்களிலும் தேடுகின்றனர். டேபிள் மீது இருக்கும் ரிப்போர்ட்டை பார்க்காமல் தேடுகிறார் வெண்பா. கடைசியில் இங்கே இல்லை என்று பாரதியிடம் சொல்லிவிட்டு செல்கிறார். வெண்பாவின் இந்த நடவடிக்கை பாரதியை சந்தேகிக்க வைக்கிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் கண்ணம்மாவின் ஹவுஸ் ஓனர் குடும்பத்தை காட்ட வழக்கம் போல அந்த சேகர் தனது மனைவியை கொடுமை படுத்த ஆரம்பிக்கிறார். தூங்கி கொண்டிருக்கும் மனைவியை மிதித்து எழுப்பி புருஷன் தூக்கம் இல்லாமல் தவிக்கறப்போ உனக்கு என்ன நிம்மதியான தூக்கம் என்று மிரட்டுகிறார்.

தான் தூங்கு வரை தூங்க கூடாது என்று அதட்டுகிறார். விடிய விடிய கஷ்டப்பட்டு முழித்திருக்கிறார். கடைசியில் யாரோ கதவை தட்ட மனைவி மீது மேலும் சந்தேகப்படுகிறார். மனைவியை முன்னால் அனுப்பி விட்டு ஒளிந்திருந்து பார்க்கிறார். பார்த்தால் கடைசியில் பால்காரன்.

விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாடகி ரிஹானாவின் கருத்து – பாடகி லதா மங்கேஷ்கர் பதிலடி!!

அடுத்து பாரதியின் வீட்டை காட்டுகின்றனர். அஞ்சலியின் பிறந்த நாள் வருவதால் அதனை எப்படி கொண்டாடுவது என யோசித்துக்கொண்டுள்ளனர். வீட்டில் வைத்தே பார்ட்டி வைத்து கொண்டாடலாம் என முடிவு செய்ய என்னென்ன சமைக்கலாம்?? என்று யோசித்துக்கொண்டுள்ளனர்.

அப்பொழுது ஹேமா வழக்கம் போல சமையல் ஆண்ட்டி என்று சொல்ல சௌந்தர்யாவிற்கு கோவம் வருகிறது. அடுத்து ஹேமாவின் காலை பார்க்க கொலுசு எங்கே என்று கேட்கிறார். குளிக்கும்போது கழட்டி வைத்து விட்டதாக பொய் சொல்லுகிறார்.

அடுத்து அகிலனிடம் செல்லும் ஹேமா தான் சமையல் ஆண்ட்டி வீட்டில் கொலுசை தவறவிட்டதாக சொல்லுகிறார். சமையல் ஆண்ட்டி வீட்டிற்கு தன்னை அழைத்து செல்லும்படி கெஞ்சுகிறார். இதற்கு அகிலனும் ஒத்துக்கொள்கிறார். மேலும் வெண்பா ரிப்போர்ட்டை தொலைத்ததை நினைத்து புழம்பிக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here