பாரதியை திருமணம் செய்ய தீவிரமாக திட்டம் போடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா அடுத்து பாரதியை எப்படி திருமணம் செய்து கொள்வது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டுள்ளார். அடுத்ததாக தனக்கு டிரீட்மென்ட் பார்த்தது பாரதி தான் என்று தெரிந்ததும் கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா வீட்டை விட்டு சென்றதும் சௌந்தர்யா கவலையாகிறார். இதனால் கோவமும் அடைகிறார். இனிமேல் தான் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்கும் வேலையை பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.

“குக் வித் கோமாளி” புகழ் முதல் சகிலா வரை – இணையத்தில் கசிந்த சம்பள பட்டியல்!!

ஹேமாவை வைத்து தான் இனி காய் நகர்த்த வேண்டும் என்று திட்டம் போடுகிறார். அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் லட்சுமி ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டிருக்க எல்லா சொந்தமும் இருந்து இப்படி தனி ஆளாக இருக்கிறாளே என்று கவலையடைந்தார். அதிலும் லட்சுமிக்கு சேர வேண்டியதை கட்டாயம் வாங்கி தருவேன் என்று கூறுகிறார்.

இன்றைய எபிசோடில் லட்சுமி அந்த வீட்டிற்கு அடுத்த தடவை செல்லும்போது தானும் வருவதாக சொல்கிறார். ஹேமாவின் வீட்டை பற்றியும் தெரிந்து கொள்கிறார். பாரதியின் வீட்டில் ஹேமாவும், பாரதியும் விளையாடிக் கொண்டே சாப்பிடுகின்றனர். இன்றைக்கு வேலை எதுவும் இல்லாததால் பாரதி ஹேமாவுடன் இருக்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்ததாக வெண்பாவை காட்ட அங்கு வேலை பார்க்கும் பெண் வெண்பாவை ஏற்றி விடுகிறார். இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பாரதி பின்னாடியே சுத்திகிட்டு இருப்பீங்க. உங்களுக்கும் வயசாகிட்டே போகுது என்று சொல்ல வெண்பாவிற்கு கண்ணம்மாவை நினைத்து கோவமாகிறது.

எப்படியாவது செத்துடுவானு பார்த்தா நடக்க மாட்டேங்குது என்று சலித்து கொள்கிறார். எப்படியாவது பாரதியை கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் திட்டம் போடுகிறார். இங்கு கண்ணம்மாவின் வீட்டில் லட்சுமி தூங்கி விட துளசி வேலையை முடித்துவிட்டு வருகிறார்.

துளசியை தனியாக அழைத்து செல்லும் கண்ணம்மா தான் ஹாஸ்பிடலில் இருக்கும்போது எவ்வளவு செலவானது என்று கேட்கிறார். அதெல்லாம் ஒன்னும் வேணாம் என்று துளசி மழுப்ப கண்ணம்மா காசை துளசியின் கையில் திணிக்கிறார். கடைசியில் பாரதி தான் செலவு செய்தது என்று உண்மையை சொல்லி விடுகிறார். இதனால் கண்ணம்மா பயங்கர கோவமாகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here