ஹேமா முன்பே வெண்பா மொபைல் நம்பரை சொல்லிவிடும் அடியாள் – வசமாக சிக்கிக்கொள்ளும் வெண்பா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ஹேமா முன்னாளிலேயே வெண்பாவின் போன் நம்பருக்கு கால் செய்து பேசுகின்றனர். இதனால் ஹேமா நம்பரை மனப்பாடமும் செய்துக்கொள்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா பாரதி கொடுத்த கம்பளைண்ட்டால் ஜெயிலில் தள்ளப்படுகிறார். மேலும் இந்த விஷயம் சௌந்தர்யாவிற்கு தெரியவர பாரதியின் முட்டாள் தனத்தை நினைத்து கோவமடைகிறார். இன்றைய எபிசோடில் சௌந்தர்யா வந்து கண்ணம்மாவை பார்க்கிறார்.

ஹேமா கிடைத்து விட்டலா என்றும் பதறுகிறார் கண்ணம்மா. எங்கு தேடியும் கிடைக்காததை சொல்ல கண்ணம்மாவிற்கு ஹேமாவை நினைந்த்து என்னவோ போல ஆகிறது. அடுத்ததாக பாரதியும், வெண்பாவும் ஸ்டேசனுக்கு வர கண்ணம்மாவை மிரட்டுகின்றனர்.

இதனால் கோவமடையும் கண்ணம்மா வெண்பாவின் கழுத்தை பிடித்து நெருக்குகிறார். அங்கிருக்கும் போலீஸ் எல்லாம் வந்து விலக்கி விட வழக்கம் போல பாரதி கண்ணம்மாவை இழிவாக பேசுகிறார். எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன் என் பொண்ணை விட்டுடு என்று சொல்ல கண்ணம்மா பாரதியை கேவலமாக பார்க்கிறார்.

இதனை வருஷம் ஆகியும் நீ இன்னும் திருந்தலையா?? என்று கேட்கிறார். மேலும் பாரதி வெண்பாவை அணைத்து இது என் மனைவி, ஹேமாவின் அம்மா இவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு என்று சொல்கிறார்.

அடுத்ததாக ஹேமாவை காட்ட தன்னை விட்டுவிடும் படி கெஞ்சுகிறார். ரவுடிகள் எல்லாம் ஹேமாவிற்கு பிரியாணி, பிஸ்கட் எல்லாம் வாங்கி தருகின்றனர். அனாலும் ஹேமா அழுதுக்கொண்டே உள்ளார். அடிக்கடி வெண்பா கால் செய்து பேசுகிறார்.

இந்நிலையில் மறுபடியும் வெண்பாவிற்கு கால் செய்ய அந்த நம்பர் ரீச் ஆகவில்லை. வேற நம்பர் சொல்லு என்று ஒருவன் கேட்க வாயை திறந்து சொல்லி விடுகிறார். அந்த நம்பரை ஹேமா புத்திசாலித்தனமாக மனப்பாடம் செய்துகொள்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here