பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தையே சந்திக்கின்றன. கடந்த சில மாதங்களாக சிறு சிறு காசுகளாக ஏறி தற்போது சதத்தை எட்டும் நிலையை இன்னும் சில நாட்களில் அடைந்து விடும் போல. அந்த அளவிற்கு அதன் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் நேற்றைய விலையை விட 25 காசுகள் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கொரோனா காலத்தில் மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வாடி வருகின்றனர். அனைத்து வகை மக்களும் தங்களின் பணிக்கு பெரிதும் அவர்களின் வாகனங்களையே நம்பி உள்ளனர். இந்நிலையில் இந்த விலை ஏற்றம் அவர்களை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
இந்த மாதத்தின் தொடக்கத்தில் பெட்ரோல் லிட்டர் 95.99ரூபாய்க்கும் மற்றும் டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அது மெல்ல மெல்ல அதிகரித்து இன்று அது சதத்தை நெருங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
இந்த விலை நிர்ணயமானது எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கின்றன. அதோடு கூடுதலாக மத்திய அரசின் வரிகளும் சேர்ந்து கொண்டு இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்றைய பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நேற்றைய விலையை விட லிட்டருக்கு 25 காசுகள் அதிகரித்து விற்கப்படுகிறது. அதாவது,சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.65-க்கும்,டீசல் ரூ.92.83-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்