இந்திய விமானங்களுக்கான தடையை கனடா அரசு தற்போது ஜூலை 21 வரை நீடித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி முதல் இந்த தடை அமலில் உள்ளது.அந்நாட்டு அரசு தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்திய விமங்களுக்கான தடையை நீடித்துள்ளது.
கோவிட்-19 தொற்று பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. எனவே பல உலக நாடுகள் இந்திய விமானம் அவர்கள் நாட்டில் நுழைய தடை விதித்தன. கனடா அரசு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் தடை விதித்து இருந்தது. பின்னர் தொற்று குறையாத காரணத்தினால் மேலும் 30 நாட்களுக்கு அதாவது ஜூன் 21 ஆம் தேதி வரை அத்தடை நீட்டிக்கப்பட்டது.
தற்போது மேலும் ஜூலை 21 வரை இந்திய விமானங்களுக்கு கனடா அரசு தடை விதித்துள்ளது. இந்தியவாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ் கனடா நாட்டிலும் பரவி வருவதால் அந்நாடு இம்முடிவை எடுத்துள்ளது. இதே போல பெரு நாட்டு அரசும் இந்திய விமானங்களுக்கான தடையை ஜூலை 11 வரை நீடித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்