‘இவ போடுற டிரஸ்ல இருந்து, சாப்பிடுற சாப்பாடு வர எங்க அம்மா போடுற பிச்ச தான’ – கண்ணம்மாவை கண்டபடி பேசிய பாரதி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் துளசி சௌந்தர்யாவிடம் வந்து குழந்தையை காட்ட அதனை கண்ணம்மா பார்த்து கோபமடைந்து வீட்டை விட்டே செல்கிறார். மேலும் சௌந்தர்யா எவ்வளவு கெஞ்சியும் சமாதானம் ஆகவில்லை.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து என்ன நடக்கும் என மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் கண்ணம்மாவிற்கு துளசியை பற்றிய உண்மைகள் தெரியவர கோபமடைந்து வீட்டை விட்டு செல்ல முயற்சிக்கிறார். ஆனால் கண்ணம்மா அதனை கேட்பதாக இல்லை.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த சமயம் பார்த்து பாரதியும் அங்கு வர சௌந்தர்யா கண்ணம்மாவிடம் கெஞ்சுவதை பார்த்து கோவமாக அழைக்கிறார். மேலும் கண்ணம்மாவும் இதனை பார்த்து கோவமடைகிறார். பாரதி கண்ணம்மாவை பார்த்து இவள் போடுற டிரஸ்ல இருந்து சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எங்க அம்மா போடுற பிச்சை தானா?? என்று கேட்க கண்ணம்மா ஆத்திரமடைகிறார்.

சௌந்தர்யாவிடம் இதற்கு தான் உங்க பக்கமே நான் வரல என்று கண்ணீர் விட்டு அழுகிறார். துளசியும் எவ்வளவோ மன்னிப்பு கேட்க ஆனால் கண்ணம்மா மன்னிப்பதாக இல்லை. கடைசியில் பாரதி இவளுக்கு இனிமேல் உதவி செய்தால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டுகிறார்.

அதற்கு அடுத்து வெண்பாவிடம் உண்மையை சொல்ல கோமதி வேகமாக வருகிறார். வெண்பா குழந்தை எங்கே என்று கேட்க சௌந்தர்யா காப்பாற்றியதை கூறுகிறார். இதனால் ஆத்திரமடையும் வெண்பா கோமதியை கண்டபடி பேசுகிறார். கோமதி இரட்டை குழந்தை விஷயத்தை பற்றி கூற வர அவரை பேசவிடாமல் வெண்பா திட்டிக்கொண்டே உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கோமதி வெண்பா கையை பிடித்து நான் சொல்ல வருவதை கேளுங்க என்று கத்த வெண்பா கோமதியை தள்ளி விடுகிறார். இதனால் கோமதி வேன் மீது மோதி கீழே விழ தலையில் அடிப்பட்டு மயக்கமடைகிறார். அப்பொழுது எல்லாரும் அங்கு வர வெண்பா மறைந்துகொள்கிறார்.

அடுத்ததாக வீட்டிற்கு வரும் சௌந்தர்யா பாரதியை பார்த்து முறைக்கிறார். இப்படியே பேச்சு வளர ஒருகட்டத்தில் வேணு திட்ட ஆரம்பிக்கிறார். அப்பொழுது பாரதி உங்க பொண்டாட்டிய சொன்னதும் உங்களுக்கு கோவம் வருதா? என்று வார்த்தையை விடுகிறார்.

இதனால் வேணு கோபமடைந்து யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்ன?? அவ என் சௌந்தர்யா. அவளை எதாவது ஒன்னு சொன்ன பாத்துகிட்டு சும்மா இருக்க மாட்டேன். என்று கோவப்பட்டு செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here