பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்குமா?? என பலரும் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் பல ட்விஸ்டுகளை வைத்து ரசிகர்களின் பொறுமையை சோதித்து வருகிறார் டைரக்டர். தற்போது பாரதி கண்ணம்மா ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஒளிபரப்பாகி வருகிறது. என்ன நடக்க போகிறதோ என்று அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டும் உள்ளனர். பாரதி தாலிகட்ட போன நேரத்தில் ஷண்முகம் வந்ததால் ஒளிந்துகொள்கின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் தாமதமும் ஆகிறது. ஐயரும் நடையை சாற்றி செல்கிறார். மேலும் இன்றைய எபிசோடில் கூட வெண்பா இத்தனை நாட்கள் காதலித்த விஷயத்தை பற்றியும் கூறுகிறார். இதனால் பாரதியும் அதனை உண்மை என்று நம்பி நாளைக்கு திருமணம் செய்துகொள்ளலாம் என்று வாக்கும் அளிக்கிறார்.
இந்நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறதோ என ஆர்வம் காட்டி வருகின்றனர் ரசிகர்கள். அதற்காக ப்ரோமோ ஒன்றை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதாவது பாரதியும், வெண்பாவும் தாலிகட்டிக்கொள்ள கோவிலுக்கு வருகின்றனர். அப்பொழுது பாரதி வீட்டில் வேலை பார்க்கும் பெண் இதனை பார்த்து விட உடனே அஞ்சலிக்கு கால் செய்து சொல்கிறார்.
ஜெய் & அஞ்சலி பிரேக்கப்புக்கு இந்த நடிகை தான் காரணமாம்!!
அஞ்சலி அதனை தனது அம்மாவிடம் சந்தோசமாக சொல்ல அவரது அம்மா இந்த விஷயம் தெரிந்தால் நாம் நடுத்தெருவில் தான் நிற்க வேண்டும் என்று கூறி கண்ணம்மாவிடம் சொல்ல செல்கிறார். இந்த விஷயம் அகிலனுக்கும் தெரிந்து விடுகிறது. வேகமாக கோவிலை நோக்கி வருகிறார்.
அப்பொழுது கண்ணம்மா இடையில் வர அஞ்சலியின் அம்மா நடந்ததை கூறுகிறார். கண்ணம்மா வெறிகொண்டு அவனை நான் சும்மாவே விடமாட்டேன் என்று கூறி வேகமாக செல்கிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும்போது பல கலகங்கள் ஏற்பட்டு பாரதிக்கு உண்மையும் தெரியவர வாய்ப்புள்ளது.