திரையுலகில் நடிகர், நடிகைகள் 2 படத்திற்கு மேல் ஜோடியாக நடித்தால் அவர்கள் கிசுகிசுக்கப்படுவது சகஜம் தான். அந்த வகையில் ஒரு ஜோடி தான் ஜெய், அஞ்சலி. காதலித்து வருவதாக செய்திகள் பரவிய நிலையில் இப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையே பிரிவும் ஏற்பட்டுள்ளது.
ஜெய், அஞ்சலி
விஜய் நடிப்பில் உருவான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் ஜெய். அடுத்தடுத்து இவர் சென்னை 28 போன்ற பல வெற்றி படங்களை கொடுத்தார். ஆனால் அவரால் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை இதுவரையிலும் பெற முடியவில்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் கதிரேசன் கதாபாத்திரத்தில் கலக்கி இருப்பார் ஜெய்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மிகவும் அப்பாவி பையனாகவும் அவருக்கு ஜோடியான அஞ்சலி அவரை மிரட்டி வைத்திருப்பதும் என எதார்த்தமான காதல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் இருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கிசுகிசுக்கள் பரவியது. ஆனால் அதனை நிரூபிக்கும் வகையில் அவர்கள் அடிக்கடி வெளியே செல்வது ஒன்றாக இருப்பது போன்றவற்றை செய்து வந்தனர்.
சரக்கு பாட்டிலுடன் அலப்பறையாக போஸ் கொடுத்த அமலா பால்!!
ஏற்கனவே அவர்கள் ஒரே அறையில் தங்கி இருப்பதாக ஒரு தயாரிப்பாளர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அஞ்சலியும் முன்னணி நாயகியாக உருவெடுத்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பாக அவர் காணாமல் போனதும், அதன் பிறகு ஒரு பிரபல இயக்குனர் கொடுமை படுத்துவதாகவும் குற்றம் சாற்றியது என அஞ்சலி வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது.
மேலும் சில காலமாக அஞ்சலியும், ஜெய்யும் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வந்தது. ஆனால் தற்போது அவர்களுக்கிடையே பிரேக்கப் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஒரு நடிகை தான் என்று கூறுகின்றனர். அதாவது நடிகர் நடிகைகளை பற்றி விமர்சித்து வரும் பத்திரிகையாளர் பயில்வான் ஜெய்க்கு தற்போது ஒரு நடிகையுடன் காதல் மலர்ந்ததாக கூறியுள்ளார்.