விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் வெண்பாவிற்கு தாலி கட்ட போகும் துர்கா மறுபடியும் போலீசிடம் மாட்டிக்கொள்கிறார். இனி தான் வெண்பாவின் ஆட்டமே தொடங்கப்போவதாக தெரிகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்றைய எபிசோடில் வெண்பா அவருக்கு உதவி செய்பவர்கள் பாபு, கோமதி உட்பட அனைவரையும் கொல்ல திட்டம் போட்டிருந்தார். மேலும் அந்த சமயம் பார்த்து துர்கா உள்ளே வர வெண்பாவிற்கு மறுபடியும் தாலி கட்ட முயற்சிக்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த சமயம் பார்த்து போலீஸ் அங்கே வர துர்கா மாட்டிக்கொள்கிறார். மேலும் பாரதி சௌந்தர்யாவிடம் மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் பாரதி ஆறுதலுக்காக வெண்பாவை தேடி செல்ல வெண்பா பாரதியை கல்யாணம் செய்துகொள் என்று தூண்டி விடுகிறார்.
இன்றைய எபிசோடில் பாரதியை கல்யாணம் செய்ய சொன்ன வெண்பாவிடம் யாரை திருமணம் செய்துகொள்ள என்று கேட்க வெண்பா ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என்று கூறுகிறார். இதனால் பாரதியும் ஷாக் ஆகி எழுந்திருக்கிறார்.
ஆனால் வெண்பா உன்னை சமாதானபடுத்த எனக்கு வேறு வழி இல்லை என்று கூறுகிறார். பாரதி தான் அப்பறம் வருவதாக கூறி அங்கிருந்து செல்கிறார். மேலும் வெண்பா எப்படியாவது உன்னை அடைந்தே தீருவேன் என்று திட்டம் தீட்டுகிறார். அடுத்ததாக சௌந்தர்யா ஹைதராபாத் செல்வதற்காக குழந்தையை அறிவிடம் ஒப்படைத்து செல்கின்றனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் கண்ணம்மாவை காட்ட கண்ணம்மா தனது குழந்தைக்கு பால் கொடுக்க எழுப்ப குழந்தை அசைவின்றி இருக்கிறது. இதனால் பயந்துபோய் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். அங்கு குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது என்று சொல்ல கண்ணம்மா கதறி அழுகிறார்.
மேலும் ஆபரேஷன் செய்ய 2 லட்சம் வேண்டும். உடனடியாக குழந்தைக்கு ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்சனை ஆகிவிடும் என்று கூறுகிறார். யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் இருக்கும் கண்ணம்மா துர்காவிற்கு கால் செய்கிறார். ஆனால் அவர் தான் ஜெயிலில் இருக்கிறாரே.
அவருக்கு கால் போகவும் இல்லை. அடுத்ததாக தான் வேலை பார்க்கும் இடத்தில் கேட்டுப்பார்க்க அவர்களும் இல்லை என்று சொல்கின்றனர். மேலும் கண்ணம்மாவிற்கு சௌந்தர்யாவிடம் கேட்கலாம் என்று தோன்ற பாரதி சொன்னதெல்லாம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அவருக்கு வேறு வழியும் இல்லை. எனவே சௌந்தர்யா வீடு தேடி செல்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.