நாமக்கல் ஆவின் பால் நிறுவனத்தில் மொத்தம் 16 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முழு விவரங்களை இனி காண்போம்.
பணிகள் மற்றும் கல்வித்தகுதி
மேனேஜர் – நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் மேனேஜர் பணிக்கு 3 காலியிடங்கள் உள்ளன இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கல்வித்தகுதி கண்டிப்பாக எம்.பி.ஏ., சி .ஏ அல்லது ஐ.சி.டபுள்யூ.ஏ ஆகிய படிப்பை படித்திருக்க வேண்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
டெபுடி மேனேஜர்– ஆவின் நிறுவனத்தில் டெபுடி மேனேஜர் பணிக்கு மொத்தம் 3 இடங்கள் உள்ளன. இதில் விண்ணப்பதாரரின் கல்வித்தகுதி ஐ.டி.டி, என்.டி.டி, யுஜி அல்லது பிஜி அதை சார்ந்த படிப்பினை படித்திருக்க வேண்டும்.
எக்ஸ்சன்செஸ் ஆஃபீஸ்சர் மற்றும் ஜூனியர் எக்சிக்யூடிவ் – ஆவின் பால் நிறுவனத்தில் எக்ஸ்சன்செஸ் ஆஃபீஸ்சர் மற்றும் ஜூனியர் எக்சிக்யூடிவ் ஆகிய இரண்டிற்கும் மொத்தம் 2 இடங்கள் உள்ளன. அதற்கான கல்வித்தகுதி எந்த பட்டம் வேண்டுமானாலும் படித்திருக்கலாம் மற்றும் கோ-ஆபரேட்டிவ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பிரைவேட் செகிரேட்டரி – நாமக்கல் ஆவின் பால் நிறுவனத்தில் பிரைவேட் செகிரேட்டரி பணிக்கு மொத்தம் 1 பணியிடங்கள் உள்ளன. அதற்கு கல்வித்தகுதி எந்த பட்டம் வேண்டுமானாலும் படித்திருக்கலாம் மற்றும் தட்டச்சு எழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
டெக்னிசியன் மற்றும் எஸ்.எஃப்.ஏ – டெக்னிசியன் பணிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் ஆவின் பால் நிறுவனத்தில் உள்ளது. இதற்கு டிப்ளமோ அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். எஸ்.எஃப்.ஏ பணிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
டிரைவர் – நாமக்கல் ஆவின் பால் நிறுவனத்தால் டிரைவர் பணிக்கு மொத்தம் 1 காலியிடம் உள்ளது. அதற்கு 8 ஆம் வகுப்பு மற்றும் எல்.எம்.வி லைசென்ஸ் பெற்றிக்க வேண்டும். இதில் விண்ணப்பிக்க வேண்டுமானால் 3 வருடம் அனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். எனவே நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன.
சம்பளம் மற்றும் வயது வரம்பு
நாமக்கல் ஆவின் நிறுவனம் அறிவித்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் கண்டிப்பாக 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
இத்தகைய பணியிடங்களுக்கு மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் மற்றும் தேர்வு முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர் www.aavinmilk.com என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பபடிவத்தை சரியாக பூர்த்தி செய்து இணையத்தளத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு 15/12/2020 தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஓ.பி.சி மற்றும் எம்.பி.சி பிரிவினர் ரூ.200 விண்ணப்ப கட்டணமாக கட்ட வேண்டும் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.100 விண்ணப்ப கட்டணமாக கட்டினால் போதும்