குழந்தையின் அழுகையால் மனமிறங்கும் பாரதி – கண்கலங்கிய சௌந்தர்யா!! விறுவிறுப்பான திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பல ட்விஸ்டுகளை வைத்து ரசிகர்களை பதட்டத்திலேயே வைத்துள்ளனர். நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்த கண்ணம்மா துளசியின் வீட்டிற்கு அடைக்கலமாக செல்கிறார். மேலும் இன்னொரு குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் சௌந்தர்யாவிடம், பாரதி யார் குழந்தை?? என்று கேட்கிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் பல திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் இடம் பெற்றன. எங்கு செல்வது என்று தெரியாமல் இருந்த கண்ணம்மாவிற்கு ஆறுதலாக துளசி தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். மேலும் கொலை வெறியுடன் கண்ணம்மாவை தேடி அலையும் வெண்பா தனது அடியாளிடம் குழந்தையை வேகமாக கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என்று பணத்தை கொடுத்து அனுப்புகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

barathi kannama

இந்நிலையில் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையை வீட்டிற்கு எடுத்து வரும் சௌந்தர்யா ஆரத்தி எடுத்து குழந்தையை உள்ளே அழைத்து செல்கிறார். மேலும் பாரதி இது யார் குழந்தை என்று கேட்க இது உன் குழந்தை தான் என்று அதிர்ச்சியளிக்கிறார். சௌந்தர்யாவின் கணவரும், அகிலனும் பதட்டமடைகின்றனர். அவர்கள் மட்டுமல்ல ரசிகர்களும் தான். ஏனென்றால் பாரதிக்கு உண்மை தெரிந்தால் அது வெண்பாவிற்கும் தெரியவரும்.

barathi kannama

இன்றைய எபிசோடில் பாரதி இது கண்ணம்மாவின் குழந்தையா?? என்று அதிர்ச்சியடைகிறார். மேலும் அங்கிருப்பவர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். ஆனால் நாம் எதிர்பார்த்தபடி சௌந்தர்யா உண்மையை கூறவில்லை. அதாவது ஆசிரமத்தில் இருந்து பாரதியின் பெயரில் குழந்தையை தத்தெடுத்தேன் என்று கூறினார். ஆனால் பாரதிக்கு இதனால் சந்தேகம் எழுகிறது.

barathi kannama

மேலும் பாரதி சௌந்தர்யாவிடம், கண்ணம்மாவிற்கு குழந்தை பிறந்த விஷயம் எனக்கு தெரியும் என்று கூறுகிறார். இது கண்ணம்மாவின் குழந்தை தான் என்று கூறுகிறார். ஆனால் சௌந்தர்யா இது கண்ணம்மாவின் குழந்தை கிடையாது என்கிறார்.

மேலும் தான் ஹாஸ்பிடலுக்கு போகும்போது அங்கு கண்ணம்மா இல்லை என்றும் அவருக்கு சிவப்பான குழந்தை பிறந்தது என்றும் அங்கிருக்கும் நர்ஸ் சொல்லியதாகவும் பாரதியிடம் கூறினார். பாரதிக்கு அப்பொழுது தான் குழந்தையின் முகம் நியாபகத்திற்கு வர இது கண்ணம்மாவின் குழந்தை அல்ல என்று நம்பி அங்கு செல்கிறார். அடுத்ததாக அகிலனிடம் அஞ்சலி கண்ணம்மாவிற்கு குழந்தை பிறந்த விஷயத்தை ஏன் சொல்லவில்லை என்று கூறி சண்டையிடுகிறார்.

barathi kannama

அடுத்ததாக குழந்தையை ஹாலில் விட்டு விட்டு செல்கிறார் சௌந்தர்யா. குழந்தை அழும் சத்தத்தை கேட்டு பாரதியின் மனது துடிக்கிறது. அங்கு யாரும் இல்லாததை பார்த்து கோவமடைகிறார். கடைசியாக குழந்தை அழுவதை தாங்க முடியாமல் தூக்க போகும் பாரதி கோவத்தால் அப்படியே விட்டு விட்டு செல்கிறார். இதையெல்லாம் அங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் சௌந்தர்யா கண் கலங்குகிறார். பாரதியை எப்படி திருத்தி கொண்டு வருவது என்று புலம்புகிறார்.

barathi kannama

அடுத்ததாக கண்ணம்மாவை காட்டுகின்றனர். அதில் துளசி கண்ணம்மாவிடம் தயங்கியபடியே அவரின் வாழ்க்கையில் நடந்தவற்றை கேட்க கண்ணம்மாவும் அனைத்தையும் கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது. இதிலிருந்து பார்க்கும்போது பாரதிக்கு நாளடைவில் குழந்தையின் மீது பாசம் வர அதிக வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here