குழந்தையை கடத்தும் கோமதியை கையும் களவுமாக பிடிக்கும் சௌந்தர்யா – விறுவிறுப்பான கதைக்களத்துடன் பாரதி கண்ணம்மா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியலில் நேற்றைய எபிசோடில் பல எதிர்பாராத திருப்பங்கள் ஒளிபரப்பானது. மேலும் வெண்பாவிற்கு கண்ணம்மாவும் குழந்தையும் கோவிலில் இருப்பது தெரியவர குழந்தையை கடத்த கோமதியை அழைக்கிறார்.

பாரதி கண்ணம்மா

நேற்றைய எபிசோடில் வெண்பா துர்காவிடம் இருந்து எப்படியோ தப்பித்து வர அங்கு கோவிலில் கண்ணம்மாவின் போஸ்ட்டரை பார்த்து ஷாக் ஆகிறார். மேலும் இதனை பாரதிக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார். மேலும் கோமதிக்கு கால் செய்து குழந்தையும் கண்ணம்மாவும் கோவிலில் இருப்பதாக சொல்லி குழந்தையை கடந்த சொல்லி மிரட்டுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கோமதியும் அது தான் சாக்கு என்று கோவிலுக்கு வருகிறார். சௌந்தர்யா தூரத்தில் இருந்து குழந்தையை பார்த்து மகிழ்கிறார். இன்றைய எபிசோடில் கண்ணம்மாவை தேடி கோவிலுக்கு வரும் கோமதி அவரை பார்த்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மா பரிகாரத்தை சுற்ற குழந்தையை பக்கத்தில் இருப்பவரிடம் விட்டு செல்கிறார்.

அது தான் சமயம் என்று கோமதி அங்கு வர குழந்தையை அங்கிருந்து அழைத்து செல்கிறார். மேலும் கோவிலை சுற்றி வர சென்ற கண்ணம்மா வெண்பாவை பார்க்கிறார். வெண்பாவை கேவலமாக பார்க்கும் கண்ணம்மாவை பார்த்து முறைக்கிறார். அடுத்ததாக கண்ணம்மா வாங்கிய அரை பத்தாதா?? என்று கேட்க எனக்கு அடிக்க கை இருக்கு என்று கூறுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் பேசி கொண்டிருக்கும்போதே கண்ணம்மாவிற்கு மயக்கம் வருகிறது. இதனை பார்த்த வெண்பா சந்தோஷமடைகிறார். நான் போட்ட ஊசி கொஞ்சம் கொஞ்சமா வேலை பாக்குது. கூடிய சீக்கிரம் என் கண்ணு முன்னாடியே கொஞ்சம் கொஞ்சமா சாக போற என்று ஏளனமாக சிரித்து அங்கிருந்து செல்கிறார்.

அப்பொழுது கோமதி குழந்தையை கடத்தி விட்டதாக கூறி கால் செய்கிறார். வெண்பா வேகமாக அங்கிருந்து செல்லும்படி கூற அங்கிருந்து வேகமாக குழந்தையை தூக்கிக்கொண்டு செல்லும் கோமதி சௌந்தர்யா கையில் மாட்டிக்கொள்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கும் கோமதியிடம் நீ இங்க என்ன பண்ற என்று கேட்க அவர் திருத்திருவென முழிக்கிறார்.

சௌந்தர்யாவிற்கு அப்பொழுது தான் நியாபகத்திற்கு வருகிறது அசிரமத்தில் கண்ணம்மாவிடம் வம்பு செய்தவள் என்று. உடனே அந்த குழந்தையை வாங்குகிறார் சௌந்தர்யா. மேலும் கோமதி அங்கிருந்து தப்பித்து செல்கிறார். குழந்தையை தேடி வரும் துளசி சௌந்தர்யாவிடம் குழந்தை இருப்பதை பார்த்து கேட்க நடந்தவற்றை சொல்வதற்கு அங்கு பாரதி வருகிறார்.

துளசியும் அங்கிருந்து வேகமாக செல்கிறார். அடுத்ததாக குழந்தைக்கு பெயர் வைக்கும் பொருட்டு பாரதியை உட்கார சொல்ல வெண்பா கடுப்பாகிக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here