பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிடம் வெண்பா இரட்டை குழந்தை விஷயம் தனக்கு தெரியும் என சொல்லி கண்ணை கட்டி தெரியாத இடத்திற்கு அழைத்து செல்கிறார்.
பாரதி கண்ணம்மா
கண்ணம்மா வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்க அந்த நேரத்தில் வெண்பாவின் கார் அந்த பக்கமாக வருகிறது. இவளை சும்மாவே விட கூடாது என்று காரை நிறுத்துகிறார். வெண்பா காரை விட்டு இறங்க இத்தனை நாள் என்ன ஆட்டம் போட்ட என்று தலையில் அடிக்கிறார்.
அடுத்தவ புருஷனை இப்படி வளைச்சி போட பாக்குறியே உனக்கு அசிங்கமா இல்லையா?? என்று வெண்பாவை பார்த்து கேவலமாக பேசுகிறார். இதனால் கோவமடையும் வெண்பா உனக்கு பிறந்த இரட்டை குழந்தை என்று சொல்லி நிறுத்தி விடுகிறார். இதனால் பதறும் கண்ணம்மா சொல்லு என்று கெஞ்சுகிறார்.
ஆனால் வெண்பா கண்ணம்மாவை கெஞ்ச விட்டு வேடிக்கை பார்க்கிறார். கடைசியாக காரில் கண்ணை கட்டிக்கொண்டு உட்கார சொல்கிறார். கண்ணம்மாவும் வேறு வழியில்லாமல் வெண்பா காரில் அமர்கிறார். இடையில் பாரதி கால் செய்ய இதுதான் சாக்கு என்று பாரதியிடம் கொஞ்சி பேசுகிறார்.
கடைசி வரை கல்யாணமே பண்ண மாட்டேன்னு நெனைக்கிறியா என்று கண்ணம்மாவிடம் கேட்டு ஏளனமாக சிரிக்கிறார் வெண்பா. எனக்கு என் குழந்தை மட்டும் போதும் வேற எதுவுமே வேண்டாம் என்று சொல்கிறார் கண்ணம்மா. கடைசியில் உன்னை இப்போ கூவத்துல தள்ளி விட போறேன் என்றும் மிரட்டுகிறார். இதனால் கடற்கரை அருகில் வந்து வண்டியை நிறுத்துகிறார்.
மேலும் அங்கு வெண்பாவிற்கு தெரிந்த பெண் இருக்க கண்ணம்மாவை அழைத்து சென்று அந்த குழந்தை எங்கே என்று கண்ணை காட்டி கேக்கிறார் வெண்பா. அவரும் அதற்கு ஏற்றார் போல பேசுகிறார். அம்மாவை அப்படியே உறிச்சி வச்சு இருக்கே என்று சொல்ல அந்த பெண்ணிடம் போய் கெஞ்சுகிறார் கண்ணம்மா. இதனை பார்த்து வெண்பா கைகொட்டி சிரிக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்