கல்வி, வேலைவாய்ப்பில் சமூக நீதி பின்பற்றப்படுகிறதா? – கண்காணிப்பு குழு அமைக்க முதல்வர் உத்தரவு!!

0

கல்வி மற்றும் அரசு சார்ந்த பணி நியமனங்களில் அரசு அறிவித்துள்ள சமூக நீதி முறை பின்பற்றப்படுகிறதா என்பதை ஆராய குழு அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

சமூக நீதி குழு:

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தந்தை பெரியாரின் பிறந்த நாள்  சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.  இதனை அடுத்து சமூக நீதியின் நூற்றாண்டு நினைவு தினம் வரவுள்ளது.  இதில், தற்போது இதனை நினைவு கூறும் விதமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு சார்ந்த முக்கிய பணிகளை கண்காணிக்கும் விதமாகவும் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக, அரசு சார்ந்த கல்வி மற்றும் வேலைவாய்ப்பு  நியமனங்களில் அரசு அறிவித்துள்ள படி இடஒதுக்கீடு முறைகள் அதாவது சமூக நீதி முறை பின்பற்றப்பட வேண்டும்.  இந்த முறையின் படியே, தமிழகத்தின்  அரசு சார்ந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும்.  மேலும், மாணவர்களின் மேல்நிலை படிப்புகளிலும் இந்த சமூக நீதி முறை பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சமூக நீதி முறை குறித்த  செயல்களை கண்காணிக்க அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.  இந்த குழு, அரசு அறிவித்துள்ள சமூக நீதி, முறையாக  பின்பற்றபடுகிறதா என்பதை கண்காணிப்பதற்காகவும், இது பின்பற்றப்படாமல் போகும் வேளையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த குழு அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும் அறிவித்தார்.  இது மட்டுமல்லாமல், இந்த குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள், சட்டவல்லுனர்கள் போன்றோர் இடம் பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here