‘இனிமேல் இந்த குழந்தைக்கு நான் தான் அப்பா’ – பாரதி சொன்ன வார்த்தையால் சௌந்தர்யா நெகிழ்ச்சி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கண்ணம்மாவையும், துர்காவையும் கொல்ல பல சதித்திட்டங்களை தீட்டுகிறார். மேலும் கண்ணம்மா தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் மும்முரமாக வேலை பார்த்துக்கொண்டுள்ளார். இதற்கிடையில் துர்கா வேறு ஜெயிலில் இருந்து தப்பித்து வெண்பாவை தேடி வருகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா நேற்றைய எபிசோடில் வெண்பா கண்ணம்மாவையும், துர்காவையும் கொல்ல தீவிரமாக திட்டம் தீட்டுகிறார். மேலும் பாரதி அந்த சமயம் வீட்டிற்குள் வரவே வெண்பா பாரதி கேட்டிருப்பாரோ என்று ஷாக் ஆகிறார். ஆனால் பாரதிக்கு எதுவும் கேட்கவில்லை. மேலும் பாரதி தன் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு வெண்பாவை அழைக்கிறார். வெண்பா குழந்தையை பற்றி தவறாக பேச பாரதி கோபமடைந்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் கண்ணம்மா தன் குழந்தையின் பெயர் வைக்கும் விழாவிற்கு வீட்டு பக்கத்தில் இருக்கும் அனைவரையும் நேரில் சென்று அழைக்கிறார். அனைவரும் மகிழ்ச்சியுடன் கணணாமவிற்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். வெண்பா வீட்டில் வீடியோ காலில் மீட்டிங் அட்டன்ட் செய்து கொண்டிருக்கும் போது துர்கா அங்கு வருகிறார்.

கதவை வேகமாக தட்ட யார் என்று புரியாமல் நிற்கிறார் வெண்பா. அந்த சமயம் பார்த்து போலீஸ் அங்கு வரவே துர்கா ஒளிந்துகொள்கிறார். போலீஸ் வந்து வெண்பா வீட்டின் கதவை தட்ட அவர் அதிர்ச்சியடைகிறார். போலீசார் துர்கா ஒரு லேடி டாக்டரை திருமணம் செய்யப்போவதாக கூறி தப்பித்ததையும் கூறுகின்றனர். இதனால் வெண்பாவும் அதிர்ச்சியடைகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் இதற்கு முன்னாள் யாரோ சத்தமாக கதவு தட்டியதை கூற போலீஸ் வீட்டை சுற்றி தேடுகிறது. ஆனால் துர்கா எப்படியோ தப்பித்து விடுகிறார். அடுத்ததாக சௌந்தர்யா குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கிறார். குழந்தையிடம் உங்க அம்மாவையும், தங்கச்சியையும் கூடிய சீக்கிரம் பார்க்க போகிறாய் என்று கூறுகிறார்.

மேலும் உன் அம்மாவை காட்டுகிறேன் என்று கண்ணம்மா போட்டோவை காட்ட அந்த சமயத்தில் பாரதி வந்து அதனை பார்த்து விடுகிறார். பாரதி வேகமாக போனை பிடிங்கி பார்க்க அதில் அம்மன் புகைப்படம் இருக்கவே அதனை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அதன் பின் இந்த குழந்தைக்கு யாரும் இல்லைனு நினைக்காதிங்க.  அது என்னோட குழந்தை நான் தான் இந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லி செல்கிறார்.

இதனால் சௌந்தர்யாவும் சந்தோஷமடைகிறார். அதன் பின் கண்ணம்மா வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கொண்டு கோவிலுக்கு செல்கிறார். ஆனால் துளசி கண்ணம்மாவை, பாரதி பார்த்து விடுவாரோ?? உண்மை தெரிந்து விடுமோ?? என்ற பதட்டத்தில் இருக்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here