போதைப்பொருள் கடத்தல் வழக்கு – சஞ்சனா கல்ராணி வீட்டில் போலீசார் சோதனை!!

0
Sanjana_galrani
Sanjana_galrani

போதை பொருள் விற்பனை காரணமாக தொடர்ந்து பல நடிகைகள் கைதாகி வருகின்றனர். அதனை தொடர்ந்து போதை பொருள் கடத்தல் விவகாரமாக சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

போதை பொருள் வழக்கு

கன்னட நடிகையான அனிகா போதை பொருள் விற்பனை காரணமாக பெங்களூரில்  கைது செய்யப்பட்டார். கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டதாக குற்றசாட்டு எழுந்தது. கைது செய்யப்பட்ட அனிகா விசாரணையில் கன்னட நட்சத்திரங்கள் பலருக்கு போதை பொருளை விற்பனை செய்ததாக கூறியிருந்தார்.

rahini divethi
rahini divethi

இதனை தொடர்ந்து திரைப்பட இயக்குனரான இந்திரஜித் லங்கேஷ் போலீசாரிடம் கொடுத்த புகாரில் 15 முன்னணி நடிகர், நடிகைகள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றும் போதை பொருள் விற்பனை செய்யும் மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த புகாரின் காரணமாக கன்னட நடிகைகளான ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர்.

Sanjana-Galrani
Sanjana-Galrani

இதனால் பெங்களூரில் ராகினி திவேதி கைது செய்யப்பட்டார். இது கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சஞ்சனா கல்ராணியின் நண்பனான ராகுலை விசாரித்ததில் அவர் அளித்த தகவலின்படி சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும் இதனால் சஞ்சனா கல்ராணி கைதாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here