கடைசி பந்தில் விக்கெட்.., பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..! களைகட்டும் WC 2022..!!!

0
கடைசி பந்தில் விக்கெட்.., பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..! களைகட்டும் WC 2022..!!!
கடைசி பந்தில் விக்கெட்.., பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..! களைகட்டும் WC 2022..!!!

T20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி நெதர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பரபரப்பான ஆட்டத்தில் பவுலரால் வெற்றி..!

டி20 உலக கோப்பையில் தற்போது பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய வங்கதேச அணி பேட்டிங்கிற்கு களமிறங்கியது. நெதர்லாந்து பவுலர்கள் அபாரமாக செயல்பட்டதால் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களால் ரன் குவிக்க முடியவில்லை.

சாண்டோ (25), சவுமியா (14), அபிப் ஹுசைன் (38), மொஸாடெக் ஹுசைன் (20) ஆகியோர் தவிர மற்றவர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களே எடுத்தது. இதன் பின்னர் 145 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய நெதர்லாந்து அணிக்கு பங்களாதேஷ் பவுலர்கள் பதிலடி தந்தனர். அனைவரும் அணியை கைவிட்ட போதிலும் கோலின் மட்டும் 62 ரன்கள் (48 பந்துகள் 6 பவுண்டரி 2 சிக்ஸர்) எடுத்து சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

ஆனாலும் மற்றவர்கள் சொதப்ப 20 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தியதோடு 4 விக்கெட்களை கபளீகரம் செய்து 9 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய டஸ்கின் அஹ்மத் ஆட்டநாயகனாக ஜொலித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here