லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவுக்கு பிடிக்காத சில விஷயங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
நயன்தாரா:
பிரபல நடிகை நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதன் பிறகு இவர்கள் ஜாலியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ஆனால் அண்மையில் இவர்கள் இருவரும் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக கூறி சர்ச்சையில் சிக்கினர்.
இவர்களது பதிவால் பலரும் 4 மாதங்களில் எப்படி குழந்தை பிறக்கும் என விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் நயன்தாராவிற்கு பிடிக்காத சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம். அதாவது இவருக்கு நேரத்தை தவறவிடுவது சுத்தமாக பிடிக்காதாம். மேலும் ஒருவர் ஒரு வேலையை சொன்னால் அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என தீவிரமாக இருப்பாராம்.
அதுமட்டுமல்லாமல் தெரியாதவர்களிடம் கூட மிகவும் நட்புடன் பழகுவாராம். நயன்தாராவிற்கு அடுத்தவர்கள் மீது கோபப்படுவது முற்றிலும் பிடிக்காத ஒன்றாகும். அதே போன்று நாம் அனைவரும் கூட்டமாக சில நிகழ்வுகளை கொண்டாடுவதை மிகவும் விரும்புவோம். ஆனால் நயன்தாராவிற்கு கூட்டமே சுத்தமாக பிடிக்காது போன்ற தகவல் வெளி வந்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்