நேற்று நான் பார்த்ததும்…இன்று நீ பார்ப்பதும்…!ரித்திகாவை பார்த்து உருகிய பாலா!!!

0

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி என்ற சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரித்திகா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ரித்திகா  பாலாவுடன் சேர்ந்து விஜய்யின் தலைவா பட பாடலை பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களான டிக் டாக், இன்ஸ்டா உள்ளிட்டவைகள் மூலம் திரைக்கு வந்து பலர் முன்னேறி வருகின்றனர். அந்த வகையை சேர்ந்தவர் தான் ரித்திகா. அவரின் சோசியல் மீடியா வீடியோக்கள் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாக்கியலட்சுமி சீரியல் அமிர்தா என்ற கதாபாத்திரம்.

அதாவது அந்த சீரியலில்  சிறுவயதிலேயே திருமணம் முடிந்து, ஒரு சில மாதங்களிலேயே தன் கணவனை இழந்து படிப்பதற்காக தன் மாமனார் மற்றும் மாமியாருடன் சென்னை வந்து தங்கிருக்கும் ஒரு பெண்ணாக மிகவும் அழுத்தமாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

மேலும் இந்த சீரியல் மூலம் அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் குக் வித் கோமாளி. இந்த சமையல் நிகழ்ச்சியின்  இடையில் என்ட்ரி ஆனார். அங்கு ஏற்கனவே கோமாளியாக இருக்கும் பாலாவுக்கு டஃப்  கொடுக்கும் வகையில் பல கவுண்டர்களை அள்ளித் தெளித்தார். மேலும் அதன் பிறகு பல ஷோக்களில் இவர்களை ஜோடியாக காண முடிந்தது. இதனால் இவர்கள் காதலிக்கிறார்கள் என்ற கிசுகிசுக்களும் வந்தன.

இந்நிலையில் தற்போது ரித்திகா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பாலா மற்றும் ரித்திகா அமர்ந்தபடி நடிகர் விஜய் மற்றும் அமலா பால் இணைந்து நடித்த தலைவா என்ற படத்தில் இடம் பெற்ற யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது … என தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இவர்களின் இந்த வீடியோ ரசிகர்களை, இவங்க அந்த சைந்தவி மற்றும் ஜி வி பிரகாஷையே மிஞ்சிருவாங்க போல என்றவாறு ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here