தான் தாத்தாவாக போவதை நினைத்து ஷாக்காகும் கோபி… பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!!!

0

விஜய் டிவியில் இரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று, கோபியிடம் ஜெனி கர்ப்பமாக இருப்பதை கூறுகிறார் பாக்கியா. அதை கேட்டு அதிர்ச்சியில் ஷாக்காக்கிறார் கோபி.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருப்பதை அறியும் பாக்கியா செழியன் மற்றும் ஜெனியுடன் ஹாஸ்பிடல் வந்து அதை உறுதி செய்கிறார். அங்கு டாக்டர் குழந்தை உண்டாகி 60 நாட்களானதாக கூற அதை கேட்டு பாக்கியா மற்றும் ஜெனி சந்தோஷத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய கதையில், டாக்டர் ஜெனிக்கு வாந்தி நிற்பதற்கு ஒரு சில மருந்துகளை எழுதிக் கொடுக்கிறார்.

இதையடுத்து பாக்கியா, ஜெனி மற்றும் செழியன் ஆகியோர் வீட்டிற்கு வருகின்றனர். அங்கு தாத்தா மற்றும் பாட்டி புதிதாக வர இருக்கும் தங்களின் பேரப்பிள்ளைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பொழுது ஜெனியின் அப்பா, அம்மா பாக்கியா வீட்டிற்கு வருகின்றனர். மேலும் மிகுந்த சந்தோஷத்தில் ஜெனி மற்றும் செழியனுக்கு வாழ்த்து கூறி ஒரு பரிசையும் கொடுக்கின்றனர். எனினும் செழியன் இது எதுவும் பிடிக்காமல் கோபம் மற்றும் வருத்தத்தில் இருக்கிறார்.

இதையடுத்து அமிர்தா வீட்டிற்கு வரும் எழிலிடம், அமிர்தாவின் அம்மா மற்றும் அப்பா பேசிக்கொண்டு இருக்கின்றனர். அதன் பின்னர் ஊருக்கு சென்றதற்கு பணம் கொடுக்கிறார் அமிர்தாவின் அப்பா, அதை வாங்க மறுக்கிறார் எழில். இவ்வாறு எழிலுடன் ஊருக்கு போதனதை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் கோபி ராதிகா வீட்டிற்கு கையில் ஒரு பார்சல் உடன் வருகிறார். அதன் பின்னர் தான் வாங்கிட்டு வந்த பிரியாணி மற்றும் லாலி பாப்பை மையூக்கு தருகிறார். அதன் பின்னர் கோபி மையூவை வெளியே கூப்பிட்டு செல்வதாக மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்கின்றார்.

அதன் பின்னர் பாக்கியா ஜெனியிடம் டாக்டர் ஆலோசனை படி நடந்து கொள்ளுமாறு கூறிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் எழில் வருகிறார். அங்கு வரும் அவர் ஜெனி மற்றும் செழியனுக்கு வாழ்த்து கூறுகிறார்.

அதன் பிறகு மாடி ரூமுக்கு செல்லும் செழியனிடம், ஜெனி என் மேல கோவமா? என கேட்கிறார். அதற்கு செழியன் கோபம் ஒன்றும் இல்லை என கூறுகிறார். எனினும் செழியன் மீண்டும் மீண்டும் குழந்தை வேணுமா வேண்டாமா? என்ற குழப்பத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் எழில் பாக்கியாவிடம் அமிர்தா வீட்டில் நடந்ததை கூறி அவர் கொடுத்து விட்ட பலகாரத்தை கொடுக்கிறார். அதன் பின்னர் வீட்டிற்கு வரும் கோபியிடம் ஜெனி கர்ப்பமாக இருப்பதை கூறுகிறார். இதை கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் கோபி அதை அப்படியே சமாளித்துவிட்டு சந்தோசப்படுவதாக நடித்துக்கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here