பாக்கியலட்சுமி தொடரில் கோபியின் கள்ளக்காதல் பற்றி அனைத்து விஷயங்களும் பாக்கியாவுக்கு தெரிந்து விடுகிறது. பேயறைந்தது போல் வீட்டின் மொட்டை மாடியில் நிற்கும் பாக்கியா பின்னர் குடும்பத்தின் வற்புறுத்தலால் கீழே வருகிறார். கோபியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு வந்து சேர்ந்து விடுகிறார்.
கோபியை பார்த்ததும் உச்சக்கட்ட கோவத்திற்கு செல்லும் பாக்கியா பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்புகிறார். எல்லோர் முன்பும் பாக்கியா ஹாஸ்பிடலில் பணம் யார் கட்டியது என கேட்கிறார். உடனே செழியன் ஸ்கேன் எடுக்க பணம் நீதானம்மா கட்டின என சொல்கிறார். அதற்கு பாக்கியா கட்டுனன் சொன்னாங்களா என்று கேட்கிறார். பதிலுக்கு செழியன் கோபியின் மனைவி தான் பணம் கட்டினாங்கன்னு சொன்னாங்க என கூறுகிறார்.
அறுவை சிகிச்சை செய்த டி. ராஜேந்தருக்கு மருத்துவர்கள் முக்கிய அறிவுரை – குடும்பத்தார் அதிரடி முடிவு!!
இதனால் மொத்த குடும்பமும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழம்பி போகின்றனர். உடனே ஈஸ்வரி எதுக்கு இதெல்லாம் கேட்குற, நீ போய் உட்காரு என கோபியிடம் சொல்கிறார். கோபியை செல்ல விடாமல் பாக்கியா வழி மறிக்கிறார். பாக்கியா இருக்கும் கோவத்தில் கண்டிப்பாக இரண்டில் ஒன்று தெரியாமல் கோபியை விடமாட்டார். ரசிகர்கள் அடுத்து நடக்கவுள்ள இந்த எபிசோடுகளுக்காக தான் காத்து கொண்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்