பாக்யாவை நடுத்தெருவுக்கு கொண்டு வர கோபி போட்ட திட்டம்., வீட்டை விட்டு வெளியேற்ற முடிவு? ஷாக்கான குடும்பம்!!

0
பாக்யாவை நடுத்தெருவுக்கு கொண்டு வர கோபி போட்ட திட்டம்., வீட்டை விட்டு வெளியேற்ற முடிவு? ஷாக்கான குடும்பம்!!
பாக்யாவை நடுத்தெருவுக்கு கொண்டு வர கோபி போட்ட திட்டம்., வீட்டை விட்டு வெளியேற்ற முடிவு? ஷாக்கான குடும்பம்!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரின், இன்றைய தொடக்கத்தில் கோபி பாக்கியாவிடம், வீடு என் பேருல இருக்கு அதுக்கு காசு தரேன்னு சொல்லிட்டு, இன்னும் கொடுக்கல அதுக்குள்ள உன் பேர எப்படி வீட்டு வாசல்ல மாட்டுன என சொல்லி சண்டை போடுகிறார். மேலும் பாக்கியா பெயர் போட்ட போர்டை எடுத்து வீட்டுக்குள் தூக்கி எரிந்து விடுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது, இப்போ நடக்குறதுக்குலாம் காரணம் பாக்கியா தான் எனக் கூறி, ஈஸ்வரி கோபிக்கு சாதகமாக பேசி பாக்கியவை திட்டுகிறார். பின்பு ஜெனி, ஆண்ட்டி மட்டும் நினைச்சிருந்தா ஜீவனாம்சம் கேட்டிருப்பாங்க? அப்டி கேட்டிருந்த இந்த வீடு ஆண்ட்டி பேருக்கே வந்திரும்னு சொல்லி பாக்யாவுக்கு சாதகமாக பேசுகிறார்.

கதிரின் ஹோட்டல் பிசினஸை கெடுக்க திட்டம்., மறைந்திருந்து பார்த்த தனம்! சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

பின்பு கோபி ராதிகாவிடம் சென்று நடந்த விசயங்களை சொல்கிறார். அப்போது ராதிகவோ, இந்த வீட்டை விட்டு நாம போயிடுவோம், நம்ப பழைய வீட்டுக்கு போயிடாலாம்னு சொல்கிறார். அப்போது பாக்கியா ஈஸ்வரியிடம் வந்து நான் பணம் அனுப்பாதது என்னோடு தப்புதான்னு சொல்லிட்டு, பணத்தை கோபிக்கு அனுப்பிவிடுகிறார். அதை பார்த்து கோபமான கோபி ராதிகாவிடம் இதைப் பற்றி சொல்கிறார். ராதிகாவும் பாக்கியவை பற்றி பேசி ஏத்தி விடுகிறார்.

பின்பு எழில் மறுபடியும் பாக்கியா பெயர் போட்ட போர்டை பாக்கியாவின் எதிர்ப்பையும் மீறி போய் வீட்டின் முன் மாற்றுகிறார். அப்போது கோவமாக வந்த கோபி இதை பார்த்து கோபத்தின் உச்சத்திற்கு போகிறார். பின் வீட்டிற்கு வந்து எல்லாரையும் கூப்பிடுகிறார். அப்போது ஈஸ்வரி உனக்கு என்ன கோபி வேணும் இப்டி சண்டை போட்டுட்டே இருக்க என திட்டுகிறார். அப்போது கோபி எல்லாரும் வாங்க நான் ஒரு முடிவு எடுத்துருக்கேன்னு சொல்கிறார். பின்பு வீட்டோட டாகுமெண்ட் லாம் என் பெயர்ல இருக்கும் போது வீடு வாசல்லா மட்டும் உங்க அம்மா பேரு எப்படி இருக்குனு சொல்லி எழிலிடம் சண்டை போடுகிறார். பின்பு செழியன், ராமமூர்த்தி வந்த பிறகு கோபி நான் இந்த வீட்டை விக்கலானு இருக்கேனு சொல்கிறார். அப்போது அனைவரும் ஷாக் ஆகிறார்கள் இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here