வீட்டை எதிர்த்து சமையல் ஆர்டரை செய்ய அக்கம் பக்கத்தினரிடம் உதவி கேட்கும் பாக்கியா – சவாலில்  ஜெயிப்பாரா??

0

பாக்கியலட்சுமி சீரியல் பல விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இன்று, தான் ஏற்று கொண்ட சமையல் ஆர்டரை செய்ய அண்டை வீட்டாரிடம் உதவி கேட்கிறார் பாக்கியா.

பாக்கியலட்சுமி சீரியல்

பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனிக்கு தான் குழந்தை பெற்று கொள்ள இஷ்டம் இல்லை என கடுமையாக பாக்கியாவை திட்டுகிறார் ஈஸ்வரி. இந்நிலையில் இன்றைய கதையில், செழியனிடம் பாக்கியா இந்த வாந்தி இது எல்லாம் கொஞ்ச நாட்கள் தான் அதுக்கு அப்புறம் எல்லாம் சரியாகிவிடும் என சொல்கிறார். வேலைக்கு சேர்ந்ததும் இதுலாம் தேவையா தான் நான் கேக்குறேன் என செழியன் சொல்கிறார்.

அதற்கு பாக்கியா இப்ப இல்லாம நீங்க வேலைல ஒரு  உயரத்துக்கு போனதுக்கு அப்புறம் எப்படி குழந்தை பெத்துப்பீங்கன்னு கேட்டு, செழியனை சமாதானம் செய்து ஜெனிக்கு அட்வைஸ் செய்து விட்டு கீழே போகிறார். இந்நிலையில் அனைவரும் சாப்பிட டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருக்கும் போது அந்த ஆர்டரை எடுத்து பண்ண போறேன் என சொல்கிறார் பாக்கியா. அப்பொழுது அனைவரும் அதிர்ச்சியாகி அவரை சரமாரியாக திட்டுகின்றனர்.

அதற்கு எழில் நீ ஏன் பிசினஸ் விஷயத்தை இங்க வந்து சொல்ற, எல்லாரும் எல்லாத்தையும் சொல்லியா செய்றாங்க என கேட்கிறார். எழிலையும் வாயை மூடுமாரு கூறுகிறார் கோபி.

அதன் பின்னர் பாக்கியா ஜோதிகா பட பாணியில்  பக்கத்து வீட்டில உள்ளவங்க கிட்ட ஹெல்ப் கேட்டு எல்லாரும் சேர்ந்து பண்ண போறோம்னு சொல்ல, அதை கேட்டு டென்ஷனான கோபி உனக்கு அறிவு இருக்கா? முட்டாள் மாதிரி பேசுற என திட்டிவிட்டு ஆர்டர் செய்ய முடியாதுனு போய் சொல்லுமாறு கூறிவிட்டு எழுந்து செல்கிறார்.

இதை போல் ஈஸ்வரி, தாத்தா மற்றும் செழியன் எழுந்து செல்கின்றனர். அதன் பின்னர் அதை நினைத்து வருத்தத்தில் இருக்க எழில் விடும்மா பாத்துக்கலாம் என கூறுகிறார். பாக்கியா, செல்வி மற்றும் எழிலை அழைத்து இந்த ஆர்டர் பற்றி பேசுகிறார்.

அதற்கு செல்வி, வீட்டில் தான் ஓகே சொல்லேல அப்புறம் எப்படின்னு கேட்க, அதற்கு பாக்கியா நான் அந்த சினிமா மாதிரி செய்யப்போறேன் என கூறுகிறார். மேலும்  நாளைக்கு போய் பக்கத்து வீட்டுல உள்ளவங்க கிட்ட பேசுறேன் கண்டிப்பா இந்த ஆர்டரை செய்வேன் என கூறுகிறார்.

அதன் பின்னர் மூவரும் இணைந்து ஆர்டர் எப்படி செய்வது என்பதை பற்றி பிளான் செய்கின்றனர். இதையடுத்து செல்வி மற்றும் பாக்கியா பக்கத்து வீட்டுக்காரங்கள பார்க்க பார்க்கிற்கு  செல்கின்றனர். அங்கு சந்திக்கும் அனைவரிடமும் ஆர்டர் பற்றியும் கூறி, நீங்க எல்லாரும் என் கூட இருந்தா இதை செஞ்சுருவேன் என கூறி ஹெல்ப் கேட்கிறார். இத்துடன் இன்றைய கதை முடிகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here