ஐபிஎல் போட்டியில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா, போட்டி தொடங்குவதற்கு முன் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
போட்டாவால் வெடித்த சர்ச்சை:
கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய ஐபிஎல் திருவிழாவில் முக்கிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கி பட்டையை கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில், பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்திய போட்டி கடந்த செவ்வாயன்று நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பு பஞ்சாப் அணியின் கிரிக்கெட் வீரர் தீபக் ஹூடா தான் ஹெல்மெட் அணிவது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு இது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட கூடாது என்பது பிசிசிஐ-ன் விதிமுறை. இதை மீறி, வீரர் வெளியிட்ட புகைப்படத்தால் இவர் சூதாட்ட தரகர்களுக்கு சிக்னல் கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் பிசிசிஐ-யின் சூதாட்ட தடுப்பு பிரிவு இவர் மீது விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்