தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தெய்வத்திருமகள் படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் பேபி சாரா. இதனை தொடர்ந்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் அவர் நடித்த இளம் வயது நந்தினி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அவர் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் நுழைய இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது பேபி சாராவை அறிமுகப்படுத்திய ஏ எல் விஜய் தான் அவரை ஹீரோயினாக வைத்து படம் எடுக்கப் போகிறாராம். இது குறித்து அவர் பேசிய விஜய், பொன்னியின் செல்வன் 2 படத்தில் மணிரத்னம் சாராவை தெய்வீக அழகுடன் சித்தரித்து காட்டிவிட்டார். இனி சாரா தைரியமாக ஹீரோயினாக நடிக்கலாம். அவரை நான் 2025ஆம் ஆண்டு தமிழில் கதாநாயகியாக அறிமுகப்படுத்த இருக்கிறேன்” என கூறியுள்ளார்.