கொரோனா தாக்கத்தால் முதல் முறையாக குழந்தை பலி – அமெரிக்காவில் சோகம்..!

0

கடந்த 24 மணிநேரத்தில் 8,816 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த பாதிப்பில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 55,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 796 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் முதல் முறையாக ஒரு பதின் வயது குழந்தை இறந்துவிட்டது.

குழந்தை உயிரிழப்பு:

கொரோனா வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்றுவந்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகர மேயர் எரிக் கார்செட்டி செவ்வாய்க்கிழமை அன்று அறிவித்துள்ளார். மேலும் லான்காஸ்டர் என்ற பகுதியைச் சேர்ந்த குழந்தை, பதின் வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்த நிலையில் இந்த வைரஸ் பாதிப்புக்கு பலியாகிவிட்டதாகவும் மேயர் எரிக் தெரிவித்தார்.

“கொரோனா வைரஸ் பாதிப்புக்கு வயது, இனம் என எந்த பாகுபாடும் கிடையாது” என்றும் அவர் குறிப்பிட்டார். “இளைஞர்களை நோக்கி இதைச் சொல்கிறேன்- இந்த நிலை உங்களுக்கும் வரக்கூடும். உங்கள் நடத்தை ஒரு உயிரைப் பாதுகாக்கவும் முடியும், பறிக்கவும் முடியும். அது உங்களுடைய உயிராகவும் இருக்கலாம்” என்று மேயர் எரிக் எச்சரித்துள்ளார்.

ஈரானில் 6 வயது குழந்தை சாவு:

ஈரானில் செவ்வாய்க்கிழமை 6 வயது குழந்தை கொரோனாவால் உயிரிழந்துள்ளது. ஏற்கெனவே அந்த நாட்டில் 3 வயது குழந்தையும் கொரோனாவுக்கு இறந்து இருக்கிறது .இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் இளைஞர்களும் கொரோனா பாதிப்பிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர்களையும் கொரோனா வைரஸ் மரணம் வரை கொண்டு செல்லும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here