ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் – போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

0
India lockdown
India lockdown

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாதம் சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என போலீஸ் தெரிவித்துள்ளார்.

21 நாள் ஊரடங்கு

உலகமெங்கும் கொரோனாவால் பீதியில் உள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று மாலையில் இருந்தே கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க சென்னை மாநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே விஸ்வநாதன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகர சாலைகளில் தேவையில்லாமல் நடமாடுபவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள 135 போலீஸ் நிலையங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, போலீசார் வாகனங்களில் ரோந்து சுற்றி வருகிறார்கள். சாலையில் யாராவது தென்பட்டால் அவர்களிடம் சென்று போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

அனைத்து மாவட்டங்களின் எல்லைகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்பவர்களுக்கு மட்டுமே வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். பொதுமக்கள் இன்னும் முடக்குதலை மீறி வெளியே வருவதால், 1897-ம் ஆண்டு தொற்று நோய்கள் சட்டத்தை மீறுபவர்கள் 1860-ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம், 188 பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடும் என்பதை மாநில அரசுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அதனால், அரசின் உத்தரவுகளை மீறியதற்காக, ஒரு நபர் ஆறு மாதங்கள் வரை சிறை வாசம் அனுபவிக்க நேரிடும் அல்லது ரூ.1000 அபராதம், சிறை இரண்டும் விதிக்கப்படும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here