பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால் தமிழகத்தில் ஏதேனும் அசம்பாவிதமான சம்பவம் நடக்க கூடும் என உள்துறை அமைச்சகம் எச்சரித்ததை தொடர்ந்து அரசு முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பினை உறுதி செய்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு:
கடந்த 1992 ஆம் ஆண்டு உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் பழமையான பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனால் பலரும் கொதிப்படைந்து உத்தர பிரதேச மாநிலத்தின் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இந்த வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கு பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வழங்கப்பட உள்ளதால் ஏதேனும் அசம்பாவிதமான சம்பவம் நடக்க வாய்ப்புகள் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – என்னென்ன தளர்வுகள்??
இதனால் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில உள்துறை செயலாளர்களுக்கு அவசர கால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடிவினை பொறுத்து பல பிரச்சனைகள் ஏற்படலாம் என்று இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டிஜிபி உத்தரவு:
பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு:
சென்னையில் போலீஸ் கமிஷனர் அகர்வால் உத்தரவுப்படி சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், தேவாலயங்கள், மசூதிகள், கோயில்கள், பொழுது போக்கு பூங்காக்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது